tamilnadu

img

அரசு மருத்துவமனைகளில் இன்று கூடுதல் மருத்துவர்கள்

சென்னை,டிச.31- புத்தாண்டு கொண்டாட்டத்தில் உயிரிழப்பு ஏற்படுவதைத் தடுக்கும் பொருட்டு  அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கூடுதல் மருத்துவர்கள் மற்றும்  செவிலியர்கள் பணியில் இருக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பான செய்திக் குறிப்பில், விபத்துகளை எதிர்கொள்ள மக்கள்  நல்வாழ்வுத்துறையும் காவல்துறையும் இணைந்து தேவையான விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த  வகையில் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் 108  ஆம்புலன்ஸ்களை தயார் நிலையில் நிறுத்தவும் விபத்துக்குள்ளானவர்க ளுக்கு உடனடியாக சிகிச்சை அளித்து, உயிரைக் காக்கும் வகையில் அரசு மருத்துவமனைகளில் கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதர  பணியாளர்கள் பணியில் இருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

;