ஹரியானா மாநிலம் சிர்சா வில் உள்ள “தேரா சச்சா சவுதா” ஆசிரமத் தின் தலைவராக இருப்பவர் குர்மீத் ராம் ரஹீம் சிங். இவர் ஆசிரம பெண் சீடர்களை பாலி யல் பலாத்காரம் செய்த வழக்கில் 20 ஆண்டு சிறை தண்டனையும், பத்திரிகையாளர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கூடுதல் சிறை தண்டனையும் பெற்றார்.
ஹரியானா சட்டமன்ற தேர்த லுக்கான வாக்குப்பதிவு அக்டோ பர் 5 அன்று நடைபெற்ற நிலை யில், அக்டோபர் 1 அன்று ஹரியா னா பாஜக அரசின் சிறப்பு உத்த ரவின் பேரில் குர்மீத் ராம் 20 நாள் பரோல் மூலம் சிறையில் இருந்து வெளியே வந்தார். தேர் தல் நேரத்தில் அவர் பரோலில் விடு விக்கப்பட்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்பொழுது மட்டுமல்ல குர்மீத் ராம் ரஹீம் இது வரை 6 முறை பரோல் மூலம் வெளியே வந்துள்ளார். அவர் பரோ லில் வந்த நேரங்கள் அனைத்தும் தேர்தல் காலங்கள் ஆகும்.
இந்நிலையில், குர்மீத் ராமிற்கு 6 முறை பரோல் வழங்கிய ரோஹ்தக் சுனாரியா சிறையின் (குர்மீத் ராம் இருக்கும் சிறை) சிறைக் காவலர் சுனில் சங்வான் ஹரியானா சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏ ஆக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பாஜகவின் வெளிப்படை யான ஆதரவாளரான குர்மீத் ராமிற்கு சிறை தண்டனை விதிக் கப்பட்ட பின்பு 15 முறை பரோல் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் 259 நாட்களுக்கு மேல் அவர் சிறையை விட்டு வெளியே இருந்துள்ளார். அவரது பரோல்கள் பெரும்பாலும் தேர்தல் நேரத்திலேயே வழங்கப் பட்டுள்ளன.
குர்மீத் ராமிற்கு பரோல் வழங்கியதற்கு கைமாறாக சிறைக்காவலர் சுனில் சங்வா னுக்கு பாஜக சீட் கொடுத்துள் ளது.