states

img

பாஜக வன்முறையால் பாதிக்கப்பட்ட ஹரியானாவில் சிபிஎம் நிவாரணம்

கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பாஜகவின் இழி அரசியலால் ஹரியானா மாநிலத்தின் 5-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள்  வகுப்புவாத வன்முறையால் உருக்குலைந்தன. இந்த வன்முறையில் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான குருகிராமிற்கு அருகே உள்ள  சோஹ்னா பகுதியில் இயல்புநிலையை இழந்து வாழும் பொதுமக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனநாயக மாதர் சங்க தோழர்கள் இணைந்து  வெள்ளியன்று அரிசி மற்றும் இதர அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்தனர். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவாக இருப்போம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் சோஹ்னா பகுதி மக்களிடம் உறுதியளித்தனர்.