சண்டிகர், ஆக. 5 - ஹரியானாவில், கடந்த வாரம் விஎச்பி-யும், அதன் வால் அமைப்பான பஜ்ரங் தளமும் நடத்திய மதக்கலவரத்தால் 6 உயிர்கள் பறிபோ யின. நூற்றுக்கணக்கான வாகனங்கள், கடைகள், வீடுகள், மசூதிகள் தீக்கிரையாக்கப்பட்டன. இந்த சம்பவங்களில் 93 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 176 பேர் கைது செய்யப்பட்டுள்ள னர். நூஹ், பரிதாபாத், பல்வால் உள்பட 5 மாவட் டங்களில் 144 தடை உத்தரவு அமல் படுத்தப்பட்டு, இணையதள சேவையும் முடக்கப்பட்டுள்ளது. ஹரியானாவில் நிலவும் அசாதாரண சூழ லால் குர்கானில் உள்ள முன்னணி நிறுவனங்க ளின் செயல்பாடுகள் முடங்கியுள்ளன. ஊழி யர்கள் பலரையும் வீட்டில் இருந்தே பணியாற்று மாறு நிறுவனங்கள் கேட்டுக்கொண்டுள்ளன. இதனிடையே வன்முறையாளர்கள் மீது உருப்படியான நடவடிக்கைகள் எதையும் அம்மாநில பாஜக அரசு எடுக்கவில்லை. அரசு மீது விமர்சனங்கள் எழுந்தபோது, தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் அரசாங்கம் பாதுகாப்பு வழங்க முடியாது என்று முதல்வர் மனோகர் லால் கட்டார் அலட்சியமாக பேசினார். பின்னர், நூஹ் மாவட்ட எஸ்.பி.யாக உள்ள வருண் சிங்லாவை பணியிடமாற்றம் செய்து, நடவ டிக்கை எடுத்தது போல காட்டிக் கொண்டுள் ளார்.
புல்டோசர் மூலம் வீடுகள் இடிப்பு
இதற்கிடையேதான், நூஹ் மாவட்டத்தில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ள தவுரு நகரில் தங்கியிருக்கும் முஸ்லிம்களின் 250 வீடுகளை புல்டோசர் மூலம் ஹரியானா பாஜக அரசு இடித்துத் தரைமட்டமாக்கி இருக்கிறது. விஎச்பி-யின் ஆத்திரமூட்டும் ஊர்வலம் காரணமாகவே, நூஹ் மாவட்டத்தில் வன்முறை வெடித்தது. விஎச்பி-யைச் சேர்ந்தவர்கள்தான் பெரும் வன்முறையை அரங்கேற்றினார்கள். மசூதிகளுக்கு, குடியிருப்புகளுக்கு தீ வைத்தார்கள். ஆனால், அதனை மறைத்து சட்ட விரோத குடியேறிகள்தான் (முஸ்லிம்கள்) வன் முறைக்கு காரணம் என்று முதல்வர் மனோகர் லால் கட்டார் முந்திக்கொண்டு கூறினார். இந்தப் பின்னணியிலேயே தவுரு நகர் முஸ்லிம்களின் 250 வீடுகளை புல்டோசர் மூலம் தரை மட்டமாக்கியுள்ளார். வீடுகளை இழந்த முஸ்லிம்கள், கடந்த 4 ஆண்டுகளாக ஹரியானா நகர ஆணையத் திற்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து குடி சைகள் அமைத்து குடியிருந்து வந்ததாகவும், அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றவே புல்டோசர் நடவடிக்கை என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், இவர்கள், வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோதமாக குடியேறி அசாமில் தங்கி யிருந்தவர்கள் என்றும் பின்னர் ஹரியானா விற்கு வந்ததாகவும் பழிசுமத்தப்பட்டுள்ளது.