states

உ.பி. அரசுப் பள்ளியில் பெட்டி பெட்டியாக மதுபாட்டில்கள்

லக்னோ, அக். 21 - உத்தரப் பிரதேச அரசுப் பள்ளியில், பெட்டி பெட்டியாக மதுபான பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சம்பவம் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் குஷி நகரில் ஒடிசா மாநில எல்லைப்பகுதியில் அரசு பள்ளி க்கூடம் ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் வழக்கம்போல் வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டு இருந்துள்ளது. அப்போது விளையாட்டு வகுப்பின் போது மாணவர்கள் சிலர் பள்ளிக்கூடத்தில் உள்ள பொருட்கள் வைத்திருக்கும் அறையை திறந்து பார்த்துள்ளனர். அப்போது அந்த அறையில் பெட்டிப் பெட்டிகளாக மதுபான ங்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்ததை கண்டுள்ளனர். இதில் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் அதனை ஆசிரியர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.  அதன்பேரில் ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர் ஆகியோர் பார்த்த போது, அந்த அறையில் மொத்தம் 52 மது பானப் பெட்டிகள் இருந்துள்ளன. அவர்கள் இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரி விக்கவே, காவல்துறையினர், பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபானங்களை கைப்ப ற்றியதுடன், வகுப்பறைக்குள் மதுபான பெட்டிகள் வந்தது குறித்து விசாரணை மேற்கொண்டனர். பள்ளியில் கட்டுமானப் பணிகள் நடந்து வந்த நிலையில், அதற்கான பொருட்கள் தான் அறையில் வைக்கப்பட்டிருந்தன. அறை யின் சாவியை கிராமத் தலைவர் வைத்திருந் தார். இதனிடையே மதுபான பெட்டிகள் வந்தது குறித்து தனக்குத் தெரியாது என்று  தலைமை ஆசிரியர் கூறியுள்ளார். எனினும், இச்சம்பவம் தொடர்பாக பள்ளித் தலைமை ஆசிரியர் தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.