states

img

கும்பமேளாவில் ‘சனாதனிகள்’ மட்டுமே கடை வைக்க வேண்டுமாம்!

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடை பெறும் கும்பமேளா விழா அடுத்த ஆண்டு (2025) நடைபெறவுள்ளது.  அலகாபாத் (உ.பி.), ஹரித்வார் (உத்தர கண்ட்), உஜ்ஜைனி (மத்தியப்பிரதேசம்) மற்றும் நாசிக் (மகாராஷ்டிரா) ஆகிய 4 இடங்களில் கும்பமேளா விழா நடை பெற்றாலும், திரிவேணி சங்கமம் என  அழைக்கப்படும் அலகாபாத்தில் நடை பெறும் கும்பமேளா விழா பிரசித்தி பெற்ற தாகும். சாமியார்கள், இந்துக்கள் மட்டு மின்றி பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்க ளும் இந்த கும்பமேளா விழாவில் பங்கேற்பர். 

இந்நிலையில், அகில பாரதிய அகடா பரிஷத் என்ற சாமியார் அமைப்பு, “சனாதனிகள் மட்டுமே கும்பமேளாவிற்கு வர வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை உத்தரப்பிரதேச அரசு மேற்கொள்ள வேண்டும்” என கூறியுள்ளது. இதுதொ டர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,”சனாதன தர்மத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே கும்ப மேளாவுக்கு வர வேண்டும். அதாவது இந்துக்கள் மட்டுமே வர வேண்டும். கும்பமேளா நிகழ்விற்கு வருபவர்களை ஆதார் சரிபார்த்த பின்னரே அனுமதிக்க வேண்டும். இதனை உத்தரப்பிரதேச அரசு கவனமாக கையாள வேண்டும். குறிப்பாக கும்பமேளா பகுதியில் சனா தனிகளின் கடைகள் மட்டுமே இருக்க வேண்டும். விழா நடக்கும் பகுதியில் உருது எழுத்துக்கள் கூட இருக்கக் கூடாது” என அதில் கூறப்பட்டுள்ளது.

இந்துத்துவா அமைப்பினரை தவிர வேறு யாரும் கும்பமேளா விழா நடை பெறும் பகுதிக்கு வரக் கூடாது என்றும், கும்பமேளாவை வைத்து முஸ்லிம் மக்கள் வியாபாரம் பார்க்கக் கூடாது என் பதை மறைமுகமாக கூறி ஏபிஏபி சாமி யார் அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.