states

img

பிராமணர்களை திருப்திப்படுத்த உ.பி.யில் குழு அமைத்த பாஜக!

லக்னோ, டிச. 28 - உத்தரப் பிரதேச சட்டப் பேரவைக்கு 2022 துவக்கத் தில் தேர்தல் வரவுள்ள நிலை யில், ஆதித்யநாத் தலைமை யிலான பாஜக அரசுக்கு எதி ராக அங்கு கடுமையான அதிருப்தி நிலவுகிறது.  அப்படியெல்லாம் பாஜக அரசு மீது பிராம ணர்கள் அதிருப்தியில் இல்லை என்று உ.பி. மாநில பாஜக தலைமை மறுத்தா லும், நிஜத்தை அந்தக் கட்சி நன்றாக உணர்ந்திருக்கிறது. உத்தரப்பிரதேச மாநில மக் கள் தொகையில் பிராமணர் கள் 17 சதவிகிதம் என்பதால், தேர்தலின்போது அது தங்க ளுக்கு எதிராகத் திரும்பி னால் தோல்விதான் என்ற அச்சம் அந்தக் கட்சிக்கு ஏற் பட்டுள்ளது.

இந்நிலையிலேயே, பிரா மணர்களைத் திருப்திப் படுத்த தனியாக குழு ஒன்றை உ.பி. பாஜக தலைமை தற் போது அமைத்துள்ளது. இந்தக் குழுவில் சிவ பிர தாப் சுக்லா (ராஜ்யசபா தலைமை கொறடா), மகேஷ் சர்மா, அபிஜத் மிஸ்ரா மற்றும் ராம் பாய் மொகா ரியா (குஜராத் எம்.பி.) ஆகி யோர் இடம் பெற்றுள்ளனர். மேலும், லக்கிம்பூர் வன் முறை யில் தொடர்புடைய தாக குற்றச்சாட்டப்பட்டுள்ள ஒன்றிய உள்துறை இணை யமைச்சர் அஜய் மிஸ்ராவும் இந்தக் குழுவிற்கு தலை மை தாங்குவார் என்று கூறப் படுகிறது. பாஜக அரசு எப்போதும் பிராமணர்களுக்காகவே பாடுபடுகிறது என்பதை பிரா மணர்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதுதான் இந்தக் குழு விற்கு முதன்மைப் பணியாக வழங்கப்பட்டுள்ளது.