states

img

சிபிஐ, அமலாக்கப் பிரிவை ஏவினாலும் உ.பி.யில் பாஜக அழிவை தடுக்க முடியாது!

லக்னோ, டிச.18- சமாஜ்வாதி கட்சித் தலைவரும் செய்தித் தொடர்பாளருமான ராஜீவ் ராய், அகிலேஷின் தனிச் செயலாளர் ஜெய்னேந்திர யாதவ், கட்சியின் மற் றொரு தலைவர் மனோஜ் யாதவ் ஆகி யோரின் வீடுகள், அலுவலகங்கள் என 13 இடங்களில் சனிக்கிழமையன்று வருமான வரித் துறையினர் திடீர் சோத னையில் ஈடுபட்டனர்.  சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகி லேஷின் நெருங்கிய உறவினர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட் டது.  உத்தரப்பிரதேசத்திற்கான சட் டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், நாளுக்கு நாள் சமாஜ்வாதி கட்சியின் செல்வாக்கு அதிகரிப்பதாக வும், பாஜக 100-க்கும் மேற்பட்ட இடங் களை இழப்பது உறுதி என்றும், கருத் துக் கணிப்புகள் வெளியான பின்னணி யில் திடீரென இந்த வருமான வரிச் சோதனை நடத்தப்பட்டு இருப்பது ஒன்றிய பாஜக அரசு மீது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தனது கட்சியினர் மீதான வருமான வரித்துறை சோதனை குறித்து அகிலேஷ் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.  அதில், “தேர்தல் நெருங்கும்போது இதெல்லாம் நடக்கும் என்று ஏற்கெ னவே நான் கூறியிருந்தேன். அது தற் போது நடந்துள்ளது. இப்போதுதான் வருமான வரித்துறை வந்துள் ளது... அடுத்ததாக அமலாக்க இயக்கு நரகம், சிபிஐ ஆகியோரையும் எதிர் பார்க்கிறேன்... ஆனால் என்ன நடந்தா லும் எங்களின் சக்கரம் (சமாஜ்வாதி யின் தேர்தல் சின்னம்) நிற்காது.. இதே வேகத்தில் தொடர்வோம்... உ.பி.யில் இருந்து பாஜக அழிந்துவிடும். மாநில மக்கள் ஏமாற மாட்டார்கள்” என்று கூறி யுள்ளார்.