பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநி லம் உதய்பூரில் 10ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவரை, சக மாண வர் ஒருவர் கத்தியால் குத்தியதால், தாக்குத லுக்குள்ளான மாணவர் கவலைக்கிடமான நிலை யில் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள் ளார். இந்த சம்பவம் சாதிரீதியிலான வன்முறையாக திசை திரும்பியது. அதாவது தாக்குதல் நடத்திய மாணவ னின் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், தாக்கப் பட்ட மாணவனின் சமூகத்தைச் சேர்ந்த வர்கள் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இந்த வன் முறையில் நான்கு கார்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ள நிலையில், பல வாகனங்கள் கல் வீசி தாக்கப்பட்டன. மேலும் உதய்பூர் நகரின் பின்புறத்தில் இருந்த கடைகள் அடித்து நொறுக் கப்பட்டன. தொடர்ந்து பதற்றம் நீடித்து வருவதால், உதய்ப்பூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.