states

img

 தண்ணீர் தாகத்தால் தார் பாலைவனத்தில் சிறுமி பலி....

ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் ஜோலார் மாவட்டம் ராணிவாடா கிராமத்தை சேர்ந்த 5 வயது சிறுமி தனது பாட்டியுடன் தார் பாலைவனத்தில் நடந்து சென்றார். அப்போது தண்ணீர் தாகத்தால் அச்சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

5 வயது சிறுமியை பாட்டி சோக்ஹி என்பவர் வளர்த்து வந்துள்ளார்.  வறுமை காரணமாக பாட்டி சோக்ஹி சில நேரங்களில் பிச்சை எடுத்துள்ளார். சோக்ஹி பாட்டி சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் கிராமப்புற மக்கள் தெரிவிக்கின்றனர். 
இந்நிலையில், சோக்ஹி பாட்டி தனது பேத்தியான 5 வயது சிறுமியை அழைத்துக்கொண்டு ராணிவாடா கிராமத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனது சகோதரியின் வீட்டிற்கு  செவ்வாய்க்கிழமையன்று  தார் பாலைவனம் வழியாக நடந்து சென்றனர்.அப்போது குடிப்பதற்கு தண்ணீர் எதுவும் கொண்டுசெல்லவில்லை.நீண்ட தூரம் தார் பாலைவனத்தில் நடந்து சென்றதால் வெயிலின் தாக்கத்தால் தண்ணீர் தாகம் ஏற்பட்டு அந்த 5 வயது சிறுமி பாலைவனத்தின் மணலில் மயங்கி சுருண்டு விழுந்துள்ளார். சோக்ஹி பாட்டியும் தண்ணீர் தாகத்தால் தனது பேத்தி அருகே சுருண்டு விழுந்துள்ளார்.   அவ்வழியாக ஆடுகளை மேய்த்துக்கொண்டு வந்த நபர், சிறுமி, பாட்டியைபார்த்து அதிர்ச்சியடைந்து, அருகில் உள்ள கிராம மக்க
ளுக்கும், அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்துள்ளார். 

சம்பவ இடத்திற்குச் சென்ற அதிகாரிகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கிக்கிடந்த பாட்டி சோக்ஹியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், 5 வயது சிறுமி பாலைவனத்திலேயே உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சி மற்றும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

;