districts

திருச்சி முக்கிய செய்திகள்

வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

பாபநாசம், மே 17 - பாபநாசம் ஒன்றியத் தில் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஊராட்சிச் செயலர் பாரதி தாசன் நேரில் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண் டார்.  தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே கோவிந்தநாட்டுச்சேரி ஊராட்சி, பட்டுக்குடியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.13.59 ஆயிரம் மதிப்பீட்டில் பொது விநியோக கட்டடம்  மற்றும் பாரத பிரதமர்  குடியிருப்பு திட்டத்தின் கீழ் பட்டுக்குடி, கூட லூர், புத்தூர், நாயக்கர் பேட்டை உள்ளிட்ட கிரா மங்களில் கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமானப் பணிகளையும், புத்தூரில் நூறு நாள் வேலைத் திட்டத்தின்கீழ் ரூ.12.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ரேசன் கடை கட்டடத்தையும் மாவட்ட ஊராட்சிச் செயலர் பாரதிதாசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உள்ளிக் கடை ஊரா ட்சியில் அண்ணா மறு மலர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.28.92 லட்சம் மதிப்பீட் டில் கட்டப்பட்டு வரும்  ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தையும் பார்வை யிட்டு, பணியைத் தரமாக  விரைந்து முடிக்க அறி வுறுத்தினார். பைக் மீது 

பைக் மீது சரக்கு லாரி மோதி விபத்து: வாலிபர் பலி

அரியலூர், மே 17 -  கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த கீழக்கொள்ளை மேற்கு தெருவைச் சேர்ந்தவர் தனகோபாலன் (41). இவர் தனது மோட்டார் சைக்கிளில் திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ் சாலையில் துளாராங் குறிச்சி மேம்பாலம் பிரிவு சாலை அருகே ஆண்டி மடம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது கண்ணி மைக்கும் நேரத்தில் தைல மரக் கட்டைகளை ஏற்றி வந்த சரக்கு லாரி  ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தனகோபாலன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உடை யார்பாளையம் போலீ சார் இறந்தவரின் உடலை  மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்து விசா ரணை நடத்தி வருகின்ற னர். 

தொழில்நுட்பக்  கல்விச் சுற்றுலா

தஞ்சாவூர், மே 17- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை தலைமை இடமாகக் கொண்டு, பால் பொருட் கள் பதப்படுத்தி விற்பனை  செய்யும், “தமிழ் பால்”  நிறுவனம் செயல்படு கிறது. இந்நிறுவனத்தின் தொழில்துறை சார்ந்த சூழல் செயல்பாடுகள் மற்றும் உற்பத்தி வழி முறைகள் குறித்து மாண வர்களுக்கு வழிகாட்டும் வகையில், தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்வி  நிறுவனங்களின் செயலா ளர் மற்றும் நிர்வாக அறங் காவலர் கொ.மருது பாண்டியன் தலைமை யில், ஆராய்ச்சி விஞ் ஞானி ஞானப்பிரகாசம் மற்றும் பேராசிரியர்கள் நேரில் சென்று பார்வை யிட்டு தொழில்நுட்பங்கள் குறித்து கேட்டறிந்தனர்.

நீர்நிலைகளில் பாதுகாப்பாக இருக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

அரியலூர், மே 17- அரியலூர் மாவட்டத்தில் கோடை மழை தொடங்கியுள்ளதையடுத்து, நீர் நிலையங்களில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று  ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித் துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், கோடை  மழை தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து மாவட்டத்தி லுள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகள், கிணறுகள் மற்றும் ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் குளிக்கவோ, நீந்தவோ, துணிகள் துவைக்கவோ, மீன்பிடிக்கவோ, பொழுது போக்கவோ மற்றும் கால்நடைகளை குளிப் பாட்டவோ செல்லும்போது பொதுமக்கள் பாது காப்பாக இருக்க வேண்டும். பாதுகாப்பற்ற அபாயகரமான நீர்நிலைகளின் கரையோரங்களில் நின்றுகொண்டு பொதுமக்கள் “செல்பி”எடுப்பதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக நீர்நிலைகளில் பள்ளி மாணவர்கள், குழந்தைகள் தனியாகவோ அல்லது குழுவாகவோ இறங்க அனு மதிக்கக் கூடாது. கோடை காலத்தில் இடி, மின்ன லுடன் வரும் மழையின் போது குழந்தைகளை வீட்டுக்கு வெளியே செல்ல அனுமதிக்கக் கூடாது. விடுமுறையில் உள்ள மாணவர்களின் பாது காப்பை உறுதி செய்திட பெற்றோர்கள் எச்சரிக்கை யாக இருக்க வேண்டும் என்றார்.

விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு உரிய இழப்பீடு கேட்டு சாலை மறியல்

அரியலூர், மே 17- அரியலூர் மாவட்டம், வி.கை காட்டியை அடுத்த புதுப்பாளையம் கிராமத்தில் வீட்டுக்குள் லாரி புகுந்த  விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத் துக்கு உரிய இழப்பீடு கேட்டு, அக்கிராம மக்கள் திருச்சி-சிதம்பரம் சாலையில் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். தேனி மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சந்திரன் (42) என்பவர் மே 13 அன்று அதிகாலை வி.கைகாட்டி  அருகேயுள்ள தனியார் சிமெண்ட் ஆலையில் சாம்பலை இறக்கிவிட்டு, திருச்சி நோக்கி லாரியை ஓட்டிச் சென்றார். புதுப்பாளையம் சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த லாரி, அங்கு ரமேஷ் என்பவரின் வீட்டுக்குள் புகுந் தது. இதில் சுவர் இடிந்து விழுந்த தில், தூங்கிக் கொண்டிருந்த ரமே ஷின் மனைவி அம்பிகா (38), அவரது குழந்தைகள் ராஜேஷ் (15), ரம்யா (13), சுபாஷ் (8) ஆகிய 4 பேரும் பலத்த காயமடைந்தனர். இதில் ரம்யா ஆபத்தான நிலையில் தஞ்சா வூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் சேர்க்கப்பட்டார். மற்ற வர்கள் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், ரமேஷ் குடும்பத் துக்கு லாரி உரிமையாளர் மற்றும் சம்பந்தப்பட்ட சிமெண்ட் ஆலை நிர்வாகம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் திருச்சி-சிதம்பரம் சாலையில் வியாழக் கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட னர். தகவலறிந்து சம்பவ இடத்துக்குச்  சென்ற காவல் துணைக் கண்காணிப் பாளர் சங்கர் கணேஷ் மற்றும் கயர்லா பாத் காவல் துறையினர், சம்பந்தப் பட்ட லாரி உரிமையாளர் மற்றும் சிமெண்ட் ஆலை நிர்வாகத்திடம் பேசி  நடவடிக்கை எடுப்பதாக உறுதி யளித்தனர். அதன்பேரில் அனை வரும் கலைந்து சென்றனர்.

கழிவுநீர் ஓடையில் தவறி விழுந்த பசு மாடு பத்திரமாக மீட்பு

அரியலூர், மே 17 - கழிவுநீர் வடிகால் ஓடையில் தவறி விழுந்த பசு மாடு பத்திர மாக மீட்கப்பட்டது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் சாலை  ஓரங்களில் அதிகளவில் சுற்றித் தெரியும் பசு மாடுகளால் அடிக்கடி வாகன விபத்துகள் மற்றும் போக்குவரத்து பாதிப்பு  ஏற்படுகிறது.  இந்நிலையில் ஜெயங்கொண்டம் வேலாயுத நகர் 3 ஆவது  குறுக்குத் தெருவில் சாலை ஓரத்தில் அமைந்துள்ள கழிவு நீர் வடிகால் ஓடையில் சினை பசு மாடு ஒன்று தவறி விழுந்து  உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. அப்போது பசு மாட்டின் சத்தம் கேட்டு, அவ்வழியே சென்றவர்கள், உடனே  ஜெயங்கொண்டம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.  பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்  துறையினர், கழிவுநீர் வடிகால் ஓடையில் சிக்கிய பசு மாட்டை நீண்ட போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்டு  வெளியில் கொண்டு வந்தனர். இதையடுத்து உயிருடன் மீட்ட  பசுமாட்டை அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

கரூர் மாவட்டத்திற்கு மே 29 உள்ளூர் விடுமுறை

கரூர், மே 17 - கரூர் நகரில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் வைகாசி பெருவிழாவையொட்டி, இதன் முக்கிய நிகழ்வான கம்பம் அமராவதி ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி மே 29 (புதன்கிழமை)  அன்று கரூர்  மாவட்டத்திற்கு உள்ளூர் அரசு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தெரி விக்கையில், கரூர் நகரில் அமைந்துள்ள மாரியம்மன் திருக் கோயில் வைகாசி பெருவிழா மே 12 முதல் ஜூன் 9 வரை நடை பெறவுள்ளது. இதன் முக்கிய நிகழ்வான கம்பம் அம ராவதி ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி மே 29 அன்று நடை பெற உள்ளது. எனவே, மே 29 (புதன்கிழமை) அன்று மட்டும் கரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் அரசு விடுமுறை அறி விக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளூர் விடுமுறை நாளான 29.5.2024 ஆனது, செலாவணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் (Under Negotiable Instrument Act 1881) அறிவிக்கப்படவில்லை. ஆதலால்  இந்த விடுமுறை நாளுக்குப் பதிலாக 8.6.2024 (சனிக்கிழமை) அன்று அரசு வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என்றார்.

தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து  விழுந்து கூலித் தொழிலாளி படுகாயம்

திருவாரூர், மே 17-  திருவாரூர் மாவட்டத்தில் கடந்த வாரம் முதல் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதில் மன்னார்குடியில் அதிக மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. தொடர்ந்து இரண்டு நாளாக கனமழை பெய்து வரும் நிலையில், மன்னார்குடி அருகே மூணாம்சேத்தி கிராமத்தில் தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து தொழிலாளி படுகாயம் அடைந்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஒன்றியம் மூணாம்சேத்தி கிராமத்தில் வசிப்பவர் கூலித் தொழிலாளி சந்திரசேகர் (40). இவரது மனைவி மாரியம்மாள். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். 1996 ஆம் ஆண்டு அரசால் கட்டி கொடுக்கப்பட்ட தொகுப்பு வீட்டில் குடியிருந்து வருகிறார். இவரது வீடு சேதமடைந்த நிலையில், மாற்று வழியும், வசதியும் இல்லாததால் அதே வீட்டில் குடியிருந்து வந்ததாக கூறப்படுகிறது. அரசு சார்பில் அந்த வீட்டை புதுப்பிக்க சில வருடத்திற்கு முன்பு ரூ.50 ஆயிரம் நிதி கொடுத்து மேற்கூரை புதுப்பிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது,  சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், புதன்கிழமை இரவு குடும்பத்தோடு தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார் சந்திரசேகர். அப்போது, திடீரென மேற்கூரை சுவரின் காரை பெயர்ந்து விழுந்ததில் குடும்பத்தினர் அனைவரும் உயிர் தப்பினர். இதில் சந்திரசேகர் படுகாயமடைந்தார்.  அருகில் உள்ளவர்கள், அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சந்திரசேகர் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். மற்றவர்கள் நலமாக உள்ளனர்.

தேசிய டெங்கு தினம் கடைப்பிடிப்பு

அரியலூர், மே 17- அரியலூர் நகராட்சி மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிலை யத்தில் மாவட்ட பொது சுகாதாரத் துறை சார்பில் தேசிய டெங்கு தினம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. பழைய நகராட்சி அலுவலக வளாகத்தில் நடை பெற்ற நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையர் மகேஸ்வரி தலைமை வகித்தார். மாவட்ட மலேரியா அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, டெங்கு கொசுவால் ஏற்படும் பாதிப்பு கள், அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்து விழிப்பு ணர்வை ஏற்படுத்தினார். அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதேபோல் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் நடை பெற்ற நிகழ்ச்சிக்கு, நிலைய முதல்வர் நாகராஜன் தலைமை வகித்தார். பயிற்சி மாணவர்கள் மற்றும் பயிற்று நர்கள், மருந்தாளுநர்கள் கலந்து கொண்டனர்.

திதி கொடுக்கச் சென்ற பெண் கடலில் தவறி விழுந்து பலி

தஞ்சாவூர், மே 17-  கடந்த சில தினங்களுக்கு முன்பு இறந்து போன தாத்தாவுக்கு, 16 ஆம் நாள் திதி கொடுக்க சென்ற பெண்  கடலுக்குள் தவறி விழுந்து பலியானார். தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே களத்தூர்  கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர் ஆசிரியர் க.காளிமுத்து. இவரது மகள் வடிவு (45) சித்துக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணி யாற்றி வந்தார்.  இந்நிலையில் வடிவுவின் தாத்தா கடந்த சில நாட்க ளுக்கு முன்பு இயற்கை எய்தினார். அவருக்கு திதி கொடுப்பதற்காக மே 16 அன்று சேதுபாவாசத்திரம் அருகே  உள்ள மனோரா கடற்கரைக்கு வடிவு தனது உறவி னர்களுடன் சென்றுள்ளார். அங்கு நண்பகல் சுமார் 12 மணி யளவில் கடலுக்குள் இறங்கி உறவினர்களுடன் தண்ணீ ரில் மூழ்கி சடங்குகளை செய்துள்ளனர்.  அப்போது வடிவு தவறி விழுந்து கடலுக்குள் மூழ்கி யுள்ளார். இதில் கடல்நீரை அவர் குடித்ததால், மூச்சுக் குழாய்க்குள் சென்றதாக கூறப்படுகிறது. உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அழகியநாயகிபுரம் அரசு  ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பேராவூ ரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறி வுறுத்தினர். இதையடுத்து பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வடிவை பரிசோதித்த மருத்து வர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரி வித்தனர். இதுகுறித்து உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் சேதுபாவாசத்திரம் கடலோர பாதுகாப்பு குழும  காவல்துறை ஆய்வாளர் மஞ்சுளா, உதவி ஆய்வாளர் சுப்பிரமணியம் ஆகியோர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இராமநாதபுரத்தில் கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்  

இராமநாதபுரம், மே 17- இராமநாதபுரம் மீன் மார்க்கெட்டில் மாவட்ட உணவு  பாதுகாப்பு துறை அதிகாரி விஜயகுமார் வியாழனன்று திடீர் சோதனை நடத்தினார். அப்போது சில வியாபாரி கள் லாப நோக்கில் நீண்ட நாட்களாக கெட்டுப்போன 20 கிலோ மீன்கள் விற்பனைக்கு இருப்பு வைத்திருந்தது தெரியவந்தது.  அந்த மீன்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் வியா பாரிகள் முன்னிலையில் அவற்றை பினாயில் ஊற்றி  அளித்தனர். அதனைத் தொடர்ந்து கெட்டுப்போன மீன்களை விற்பனைக்கு வைத்திருந்த வியாபாரிகளுக்கு தலா 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது . மேலும் இது போன்ற முறைகேடான செயலில் ஈடுபடுவோர் மீது கடு மையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட உணவு  பாதுகாப்புத் துறை அலுவலர் விஜயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர ஜூன் 7 வரை விண்ணப்பிக்கலாம்

அரியலூர், மே 17- அரியலூர் மற்றும் ஆண்டிமடத்திலுள்ள அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) சேர ஜூன் 7 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், அரியலூர் மற்றும் ஆண்டிமடம் அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள், தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர  https://skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம். இதற்கு 8 மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 40 வயதுக்குள் இருக்க வேண்டும். பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது. இதற்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.50. இதை இணையதளம் மற்றும் ஏடிஎம், கிரிடிட் கார்டு வாயிலாக செலுத்த வேண்டும். அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையம், ஆண்டிமடம் அரசு தொழிற்பயிற்சி நிலையம், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் ஆகிய இடங்களில் செயல்படும் சேர்க்கை உதவி மையங்களிலும், தனியார் கணினி மையம் மூலமும் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு அரியலூர் அரசு தொழிற்பயற்சி நிலையம்-9499055877, 04329-228408. ஆண்டிமடம் அரசு தொழிற் பயிற்சி நிலையம் 9499055879 என்ற தொலைபேசி எண்களில் தொடர்புக் கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.