ராஜஸ்தான் மாநிலத்தில் நவம்பர் 25 அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற வுள்ள நிலையில், வியாழனன்று தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது. கடைசி நாளில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாஜக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்ட னர். இந்நிலையில், செவ்வா யன்று பார்மரில் நடை பெற்ற பிரச்சார பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, “நமது இந்திய அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி வந்தனர். கிட்டத்தட்ட உலகக் கோப்பையை நெருங்கி விட்டார்கள். ஆனால், ஒரு கெட்ட சகுனம் அவர்களை தோற்கடிக்க வைத்துவிட்டது” எனக் கூறினார். உடனே பாஜகவினர் பிரதமர் மோடியை கெட்ட சகு னம் என்று கூறியதாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர். பிரதமர் மோடி விவகாரம் என்றதும், ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் அவசர நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நோட்டீ ஸில்,”ராகுலின் பேச்சு தேர்தல் விதிமுறை களுக்கு எதிரானது என்றும் தனிநபர் தாக்குதல் என்றும் இதுபற்றி நவம்பர் 25-க்குள் விளக்கம் அளிக்க வேண்டும்” என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.