சஞ்சய் ராவத் கேள்வி
மும்பை, டிச. 31 - மக்களை முகக்கவசம் அணியச் சொல் லும் பிரதமர் மோடி, தான் மட்டும் முகக் கவசம் அணியாதது ஏன்? என்று சிவ சேனா எம்.பி. சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பி யுள்ளார். மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு, சஞ்சய் ராவத் வெளியே வந்தார். அப்போது, நீங் கள் ஏன், முகக்கவசம் அணியவில்லை என்று செய்தியாளர்கள் கேள்வியெழுப்பி னர். அதற்கு பதிலளித்த சஞ்சய் ராவத், பிர தமரே முகக்கவசம் அணியாததால் தானும் முகக்கவசம் அணியவில்லை என்று கிண்ட லாக பதிலளித்துள்ளார். “எல்லோரும் முகக்கவசம் அணிய வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடி கூறு கிறார்.
ஆனால் அவரே முகக்கவசம் அணி வதில்லை. மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே முகக்கவசம் அணிகிறார். ஆனால் மோடிதான் நாட்டின் தலைவர் என்பதால் நான் பிரதமரைப் பின் தொட ருகிறேன். எனவே நான் முகக்கவசம் அணி வதில்லை. நாட்டு மக்களும் பிரதமரை பின்பற்றி முகக்கவசம் அணிவதில்லை” என்று தனது கிண்டலைத் தொடர்ந்த அவர், சுப்ரியா சுலே, சதானந்த் சுலே, பிரஜக்த் தன்புரே, வர்ஷா கெய்க்வாட் ஆகிய எம்.பி க்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி யுள்ளதால், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது எல்லோரும் மிக கவனமாக இருக்க வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.