மும்பை,மார்ச் 2- போதைப்பொருள் கடத்தல் கும்ப லுக்கும் ஆர்யன் கானுக்கும் தொடர்பு இருப்ப தற்கான ஆதாரங்கள் இல்லை என்று சிறப்பு புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது. மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் நடைபெற்ற போதைப் பொருள் விருந்து நிகழ்ச்சியில் இந்தி நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டார். பின்னர் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த நிலையில் போதைப்பொருள் சதி அல்லது சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கும் ஆர்யன் கானுக்கும் சம்பந்தம் இருப்பதற்கான போதுமான ஆதா ரங்கள் கிடைக்கவில்லை என போதைப் பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தின் (என்சிபி) சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) தெரிவித்துள்ளது. ஆர்யன் கான் தொடர்பான இறுதிக்கட்ட விசாரணை முடிவை சிறப்பு புலனாய்வுக் குழு, என்சிபி இயக்குநர் ஜெனரல் எஸ்.என். பிரதானிடம் இன்னும் சில மாதங்களில் சமர்ப்பிக்க வுள்ளனர்.இந்நிலையில் இத்தகவலை சிறப்பு புலனாய்வுக்குழு தெரிவித்துள்ளது.