மும்பை, செப். 2 - ரூ. 1000 கோடி மதிப்பிலான மகாராஷ்டிரா மாநில கூட்டுறவு வங்கி (MSCB) மோசடி வழக்கி லிருந்து, அஜித் பவார் மற்றும் அவரின் மனைவி யின் பெயர்களை அமலாக்கத்துறை நீக்கி யுள்ளது. மகாராஷ்டிர மாநில ஆளும் பாஜக மற்றும் சிவசேனா கூட்டணியில், அஜித் பவார் இணைந்து துணைமுதல்வரான சில வாரங்களுக்கு உள்ளாகவே, பாஜக அரசு அவரை தங்களிட முள்ள ‘வாஷிங் மிஷனில்’ முக்கியெடுத்து ‘புனிதர்’ ஆக்கியுள்ளது. மறுபுறத்தில் தங்களை எதிர்த்துக் கொண்டி ருக்கும் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் தலைவர்களின் பெயர்களை புதிதாக குற்றப்பத்திரிகையில் சேர்த்துள்ளது.
1000 கோடி ரூபாய் ஊழல்
புனேயிலுள்ள மகாராஷ்டிரா மாநில கூட்டுறவு வங்கியில் (MSCB), 2007 முதல் 2011 வரையிலான காலத்தில் சுமார் 1,000 கோடி ரூபாய் அளவிற்கு முறை கேடு நடந்ததாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. இந்த விவகாரத்தில், குரு கமாடிட்டி சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட், ஜரந்தேஷ் வர் சுகர் மில்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய 2 நிறுவனங்கள், பட்டய கணக்காளர் யோகேஷ் பக்ரேச்சா மற்றும் கூட்டுறவு வங்கி இயக்கு நர் குழுவில் இருந்த அஜித் பவார் ஆகியோர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. 2019 ஆகஸ்ட் 26 அன்று, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணையைத் துவங்கிய அமலாக்கத்துறை, சதாராவில் உள்ள தொழிற்சாலை தொடர்பான நிலம், கட்டடம், ஆலை, இயந்திரங்கள் என, 65 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துகளையும் பறிமுதல் செய்தது. மார்ச் 2023-இல், அமலாக்கத்துறை தனது முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில், அஜித் பவார் பெயர் இடம்பெறவில்லை. அடுத்து தாக்கல் செய்யப்படும் துணைக் குற்றப்பத்திரிகையில், அஜித் பவார், அவரது மனைவி சுனேத்ரா ஆகியோரின் பெயர்கள் இடம்பெறும் என கூறப்பட்டது.
அஜித் பவாரை சாடிய பாஜக தலைவர்கள்
இதனை முன்வைத்து, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகி யோர் மகாராஷ்டிரா செல்லும் போதெல்லாம், அஜித் பவார் மீது இந்த ஊழல் முறைகேடு களைக் குறிப்பிட்டு அவரை கடுமையாக விமர் சிப்பதை வழக்கமாகவும் கொண்டிருந்தனர். தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் - சிவசேனா (யுபிடி) அடங்கிய ‘மகா விகாஸ் அகாதி’ கூட்டணியே ஒரு ஊழல் கூட்டணி என்று சாடி வந்தனர்.
கூட்டணிக்கு வந்ததும் துணை முதல்வர் பதவி
இதனிடையே, கடந்த ஜூலை மாதம் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்த அஜித் பவார், சுமார் 40 எம்எல்ஏ-க்களுடன் திடீரென பாஜக - சிவசேனா கூட்டணியில் இணைந்தார். அவரை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்ற பாஜக, அவருக்கு உடனடியாக நிதித்துறையுடன் துணைமுதல்வர் பதவியை பரிசாக தூக்கிக் கொடுத்தது. ஊழல் பேர்வழி என குற்றம் சாட்டப்பட்ட அஜித் பவாரை, அவர் தங்களுடன் கூட்டணி சேர்ந்ததும் அமைச்சராக்கியது.
புனிதர் ஆக்கிய ‘வாஷிங் மெஷின்’
இந்தப் பின்னணியில்தான், அமலாக் கத்துறை அண்மையில் தனது துணைக் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. அதில், அஜித் பவார், அவரது மனைவி சுனேத்ரா ஆகியோரின் பெயர்களை சத்தமே இல்லா மல் நீக்கியுள்ளது. மாறாக சரத் பவார் தலைமை யிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவரான ஜெயந்த் பாட்டீல் உள்ளிட்ட 14 பெயர் களை அமலாக்கத்துறை சேர்த்துள்ளது. இது பாஜக-வின் ‘ஊழல் ஒழிப்பு யோக்யதையை’ மீண்டும் அம்பலப்படுத்துவதாக அமைத்துள் ளது.
2019-இலும் 9 வழக்குகள் தள்ளுபடி
2019-ஆம் ஆண்டும், இதேபோல பாஜக-வுடன் கூட்டணி சேர்ந்து அஜித் பவார் துணை முதல்வர் ஆனார். அப்போது, அஜித் பவார் மீது ரூ. 70 ஆயிரம் கோடி அளவிற்கான நீர்ப்பாசன ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு இருந்தது. இதில் பாஜக அரசு வழக்கு பதிவுசெய்ததால், அஜித் பவார் தனது எம்எல்ஏ பதவியையே ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், 2019-இல் தங்களுடன் கூட்டணி சேர்ந்ததும், அஜித் பவார் மீதான நீர்ப்பாசன ஊழல் தொடர்புடைய 9 வழக்குகளையும் அவசர அவசரமாக மகாராஷ்டிர பாஜக அரசு ரத்து செய்தது. தற்போது கூட்டுறவு வங்கி ஊழல் வழக்கிலிருந்தும் அஜித் பவார் பெயர் விடுவிக்கப்பட்டுள்ளது.