மும்பை, டிச.12 - ‘நிர்பயா’ நிதியிலிருந்து பெண் களின் பாதுகாப்புப் பணிக்காக வாங் கப்பட்ட எஸ்யூவி கார்கள், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்எல்ஏக் களின் பாதுகாப்புக்கு பயன்படுத்தப் பட்டு வருவது அம்பலமாகி உள்ளது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் திட்டங்களை அமல்படுத்தும் வகையில் கடந்த 2013-இல் ஒன்றிய அரசு ‘நிர்பயா நிதி’யை உருவாக்கி யது. இந்த நிதியிலிருந்து மகாராஷ்டிர மாநிலத்திற்கு ரூ.30 கோடி ஒதுக்கப் பட்டது. இந்த நிதியைக் கொண்டு பெண்களின் பாதுகாப்புக்காக 220 பொலிரோ வாகனங்கள், 35 ஏர்டிகாக் கள், 313 பல்சர் பைக்குகள், 200 ஆக் டிவா ஸ்கூட்டர்களை மும்பை மாநகர காவல்துறை வாங்கியது. கடந்த ஜூன் மாதம் வாங்கப்பட்ட இந்த வாகனங்கள் அனைத்தும் 97 காவல் நிலையங்கள், சைபர், போக்குவரத்து, கடலோர காவல் உள்ளிட்டவற்றுக்கு வழங்கப்பட்டு இருந்தன. இந்நிலையில்தான், இவற்றில் மும்பை போக்குவரத்து காவல் துறை யின் உத்தரவின் பேரில் 47 பொலிரோ வாகனங்கள் முதல்வர் ஷிண்டே ஆத ரவு எம்.பி.க்கள் 12 பேர், எம்எல்ஏ-க்கள் 40 பேரின் ‘ஒய்-பிளஸ்’ பாதுகாப்புப் பணிக்கு மாற்றப்பட்டுள்ளன. இவற்றில், 17 வாகனங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டு விட்டாலும், மீத முள்ள 30 பொலிரோ வாகனங்கள் இப் போதும் எம்.பி., எம்எல்ஏ-க்களின் பாது காப்பு பணிக்குப் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், இதனால் பெண்கள் பாதுகாப்புக்கான ரோந்துப் பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குற்றச் சாட்டுக்கள் எழுந்துள்ளன.
மூத்த காவல்துறை அதிகாரி ஒரு வர் மூலமாகவே இந்த உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. இது மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. ‘பெண்களின் பாதுகாப்பைவிட ஆளும் கட்சி எம்.பி.க்கள், எம்எல்ஏக் களுக்கு பாதுகாப்பு வழங்குவதுதான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததா? என சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி), காங்கிரஸ், தேசியவாத காங்கி ரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி யெழுப்பியுள்ளன. வாகனங்கள் கொள்முதல் செய் யப்பட்ட நோக்கத்துக்காக பயன்படுத் தப்படாவிட்டால், எங்கள் கட்சியின் சார் பில் போராட்டம் நடத்தப்படும் என உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியின் செய்தித் தொடர் பாளரும் மாநிலங்களவை எம்.பி.யு மான பிரியங்கா சதுர்வேதி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனிடையே முதல்வர் ஷிண்டே தரப்பின் செய்தித் தொடர்பாளர் கிரண் பவாஸ்கர் அளித்துள்ள பேட்டியில், “எங்கள் எம்எல்ஏ-க்களுக்காக எத் தனை வாகனங்கள் பயன்படுத்தப்படு கின்றன என்பது குறித்து எனக்குத் தெரி யவில்லை. ஆனால், உத்தவ் தாக்கரே பிரிவினரால் கதர் மற்றும் கோக்கா போன்ற தொடர்ச்சியான கேலிக்கூத்து களால் எங்கள் எம்எல்ஏ-க்கள் எதிர் கொள்ளும் அச்சுறுத்தல் காரணமா கவே ஒய்-பிளஸ் எஸ்கார்ட் பாது காப்பை கொடுத்துள்ளோம்” என்று குற்றச்சாட்டை ஒருவழியாக ஒப்புக் கொண்டுள்ளார்.