மும்பை, நவ. 17 இந்து மகாசபை-யை நிறுவியவரும், ‘இந்துத்துவா’ என்ற மக்களைப் பிளவு படுத்தும் பாசிச சித்தாந்தத்தின் சூத்திரதாரி யும், மகாத்மா காந்தி-யை படுகொலை செய்த கோட்சே-வின் குருநாதருமான வி.டி. சாவர்க்கரை, விடுதலைப் போராட்ட வீரராக சித்தரிக்கும் வேலையில் பாஜக தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்ற பிர்சா முண்டா பிறந்த நாள் விழாவில், இது குறித்துப் பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, சாவர்க்கரை கடுமையாகவிமர்சித்தார். “பழங்குடியினர் சமூகத்தின் நாயகன் பிர்சா முண்டா ஒரு மாவீரர். பிரிட்டிஷ் ஏகாதி பத்தியத்திற்கு எதிராக தனது 24 வயதிலேயே கிளர்ந்தெழுந்தவர். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தி ற்கு அடிபணியாமல் அவர்களுக்கு எதிராக சண்டையிட்டு உயிர் துறந்தவர். ஆனால், பிர்சா முண்டாவையும், அவரது சித்தாந்தத்தையும் பாஜக தொடர்ந்து சிறுமைப்படுத்தி வருகிறது.
மாவீரரான பிர்சா முண்டாவை இழிவுப்படுத்தும் பாஜக-வினர் யாரைத் தூக்கி நிறுத்துகிறார்கள் என்றால், பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் பல முறை மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து சிறையில் இருந்து வெளியே வந்த சாவர்க்க ரை. பிரிட்டிஷார் தயவில் விடுதலையாகி அவர்களிடமே ஓய்வூதியம் பெற்று வாழ்ந்தவர் சாவர்க்கர். அவர் எப்படி வீரர் ஆவார்” என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியிருந்தார். ராகுலின் இந்தப் பேச்சு பெரும் வரவேற்பை பெற்றது. அவரது பேச்சை பலரும் சமூகவலைதளங்களில் பகிர்ந்து பாராட்டினர். மறுபுறத்தில் இது பாஜக வட்டாரத்தை ஆத்திரமடையச் செய்தது. அதனொரு பகுதியாக, தனது தாத்தாவை தொடர்ந்து இழிவுப்படுத்தி வருவதற்காக ராகுல் காந்தி மீது வழக்கு தொடரப் போவதாக சாவர்க்கரின் பேரன் ரஞ்சித் சாவர்க்கர் கொதித்துள்ளார். “ஒரு மிகப்பெரிய சுதந்திரப் போராட்ட வீரர் என்றும் பாராமல், வீர சாவர்க்கரை ராகுல் காந்தி தொடர்ந்து இழிவாகப் பேசி வருகிறார். ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் வாக்கு வங்கியை குறிவைத்து சாவர்க்கரை காங்கிரசாரும், ராகுல் காந்தியும் தரக்குறைவாக பேசுவதை வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். எனவே, ராகுல் காந்தி மீது காவல் நிலையத்தில் நான் புகார் அளிக்க உள்ளேன்” என்று தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் ரஞ்சித் சாவர்க்கர் தெரிவித்துள்ளார்.