மும்பை, ஜூலை 4 - மகாராஷ்டிரா முதல்வராக புதி தாக பதவியேற்றுக் கொண்ட ஏக்நாத் ஷிண்டே, திங்களன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும் பான்மையை நிரூபித்து ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டார். மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 288 ஆகும். இவர்களில் ஒரு உறுப்பினர் இறந்துவிட்ட நிலையில், தற்போதைய எண்ணிக்கை 287 ஆகவும், இதில் பெரும்பான்மைக்கு 144 உறுப்பினர் களின் ஆதரவு தேவை என்றும் இருந்தது. இந்நிலையில், திங்களன்று சட்ட மன்றத்தில் ஆஜரான உறுப்பினர்களின் தலையை எண்ணி கணக்கிடும் முறை யில் நடைபெற்ற வாக்குப் பதிவில் ஏக்நாத் ஷிண்டே அரசுக்கு ஆதரவாக 164 வாக்குகளும், எதிராக 99 வாக்குகளும் பதிவாகின.
இதனால் தேவையான எண்ணிக் கையைக் காட்டிலும் கூடுதலாக 20 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று ஏக்நாத் ஷிண்டே தனது அரசுக்கான பெரும்பான்மையை நிரூபித்தார். முன்னதாக ஞாயிறன்று நடை பெற்ற சபாநாயகர் தேர்தலில், அதிருப்தி சிவசேனா - பாஜக கூட்டணி சார்பில் பாஜக எம்எல்ஏ ராகுல் நர்வேக ரும், சிவசேனா சார்பில் ராஜன் சால்வி யும் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில் பாஜக-வைச் சேர்ந்த நர்வேகர் மொத்தம் 164 வாக்குகள் பெற்று புதிய சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். சிவசேனாவின் ராஜன் சால்விக்கு 107 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. சபாநாயகர் தேர்தலில் சிவசேனா வேட்பாளர் பெற்ற வாக்குகளோடு ஒப்பிடுகையில், ஷிண்டே அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த வாக்கு கள் குறைந்துள்ளன.
வாக்கெடுப்புக்கு வராத எதிர்க்கட்சி எம்எல்ஏ-க்கள்
காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் கள் விஜய் வடேட்டிவார், ஜீஷன் சித்திக் மற்றும் தீரஜ் தேஷ்முக், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் சங்க்ராம் ஜக்தாப், அகிலேஷ் தலைமை யிலான சமாஜ்வாதி கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர்கள் அபு ஆஸ்மி மற்றும் ரைஸ் ஷேக் மற்றும் அசாது தீன் ஒவைசி தலைமையிலான ஏஐஎம்ஐஎம் கட்சியின் ஷா பரூக் அன்வர் ஆகிய 7 பேர் வாக்களிக்கவே வரவில்லை. காங்கிரஸ் முன்னாள் முதல்வர் அசோக் சவான் வாக்கெடுப்பு முடிந்த பிறகு வந்தார். இதுதவிர உத்தவ் தாக்கரே அணியில் இருந்த சந்தோஷ் பங்கர் கடைசி நேரத்தில் ஏக்நாத் ஷிண்டே அரசுக்கு ஆதரவளித்தார். இவர்கள் அனைவரும், சபாநாய கர் தேர்தலில் ஆஜராகி, பாஜக வேட்பா ளருக்கு எதிராக வாக்களித்திருந்தனர். இவர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாததால், ஷிண்டே அர சுக்கு எதிரான வாக்குகள் குறைந்து போயின. மறுபுறத்தில் ஷிண்டே அரசு, சிவசேனா அதிருப்தி எம்எல்ஏ-க்கள் 40 பேர், பாஜக எம்எல்ஏ-க்கள் 106 பேர், சுயேட்சை எம்எல்ஏ-க்கள் 18 பேர் என மொத்தம் 164 எம்எல்ஏ-க்களின் வாக்குகளைப் பெற்று எளிதாக பெரும்பான்மையை நிரூபித்துள்ளது.
ஷிண்டே ஆதரவு எம்எல்ஏ-க்கள் 40 ஆக அதிகரிப்பு!
ஷிண்டே முகாமில் இடம்பெற் றுள்ள தற்போதைய சிவசேனா எம் எல்ஏ-க்களின் எண்ணிக்கை சந்தோஷ் பங்கருடன் 40 ஆக அதிகரித்துள்ளது. முன்னதாக புதிய சபாநாயகரான நர்வேகர், ஞாயிறன்று இரவே, சிவ சேனாவின் சட்டமன்றக் கட்சித் தலைவ ராக ஏக்நாத் ஷிண்டே-வையும், தலை மைக் கொறடாவாக கோகவாலே-வை யும் அங்கீகரித்து உத்தரவு பிறப் பித்தார். இதன்மூலம் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட சிவசேனா அதிருப்தி எம்எல்ஏ-க்கள் 16 பேரை தகுதி நீக்கும் செய்வது தொடர்பான முந்தைய துணை சபாநாயகர் நர்காரி ஜிர்வாலின் நோட்டீஸ் நீர்த்துப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
16 எம்எல்ஏ-க்கள் மீதான தகுதிநீக்க நோட்டீஸ் ரத்து?
தகுதிநீக்க வழக்கு உச்சநீதிமன்றத் தில் ஜூலை 11-ஆம் தேதி விசாரணை க்கு வரவுள்ள நிலையில், இதற்குப் பதி லளிக்கும் இடத்தில் தற்போதைய புதிய சபாநாயகர் நர்வேகர்தான் உள்ளார். அவர், தகுதி நீக்க நடவடிக்கையை வலி யுறுத்தமாட்டார் என்பதுடன், ஏக்நாத் ஷிண்டேதான் சிவசேனாவின் அதி காரப்பூர்வ சட்டமன்றக் கட்சித் தலைவர் என்று அறிவித்து விட்டதால் வழக்கை விசாரிக்க வேண்டிய தேவையே உச்ச நீதிமன்றத்திற்கு எழாது என்று கூறப்படு கிறது.
ஆதித்ய தாக்கரே-வின் பதவியும் பறிபோகிறது?
அதுமட்டுமல்ல, தகுதிநீக்க கத்தி தற்போது உத்தவ் தாக்கரே ஆதரவு எம்எல்ஏ-க்கள் மீது திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது, சிவசேனா வின் தலைமைக் கொறடாவாக பாரத் கோகவாலே அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உத்தரவுப்படி நடந்து கொள்ளாதவர்களின் எம்எல்ஏ பதவி பறிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரேவுக்கு மட்டுமே பாரத் கோகவாலே கொறடா உத்தரவு பிறப்பித்து இருந்தார் என்பதால், திங்களன்று ஏக்நாத் ஷிண்டேவுக்கு எதிராக வாக்களித்த ஆதித்ய தாக்கரே-வின் எம்எல்ஏ பதவி பறிபோகும் நிலை உருவாகியுள்ளது.
தாக்கரேவின் குடும்பத்தை துடைந்தெறிந்த பாஜக!
அதாவது மகாராஷ்டிரா சட்டப் பேரவையிலிருந்து தாக்கரே குடும் பத்தை மொத்தமாக பாஜக துடைத் தெறிய உள்ளது. முன்னதாக உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியை மட்டு மல்லாமல், சட்டமேலவை உறுப்பினர் பதவியையும் சேர்த்தே ராஜினாமா செய் தார். தற்போது ஆதித்ய தாக்கரே-வின் பதவியும் பறிபோகும் பட்சத்தில், அது தாக்கரே குடும்பம் மொத்தமும் மகா ராஷ்டிரா சட்டப்பேரவையிலிருந்து துடைத்தெறியப்பட்டதாக ஆகும். இதுதான் பாஜக-வின் திட்டம் என்றும் கூறப்படுகிறது. 40 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னுடன் நகமும் சதையு மாக கூட்டணியில் இருந்த சிவசேனா வையும், தாக்கரே குடும்பத்தையும் பாஜக இன்று அரசியலில் தடம்தெரியாமல் ஆக்கியுள்ளது.