மிசோரம் மாநிலத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த ரயில்வே பாலம் திடீரென இடிந்து விழுந்ததில் 17 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
மிசோரம் மாநிலத்தில், சைராங் பகுதிக்கு அருகே புதிதாகக் கட்டப்பட்டு வந்த ரயில்வே பாலம் இன்று காலை 10 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. அப்போது சுமார் 40 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர், இடிபாடுகளில் இருந்து 17 தொழிலாளர்களின் உடல்கள் மீட்டனர். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.