states

img

மணிப்பூர் விவகாரம் : பிருந்தா காரத்திடம் கவலை தெரிவித்த ஜனாதிபதி முர்மு

பாஜகவின் வகுப்புவாத அரசியலால் உருகுலைந்துள்ள மணிப்பூரின் உண்மை நிலைமையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தலைவர்  பி.கே.ஸ்ரீமதி, பொதுச்செயலாளர் மரியம் தாவ்லே ஆகியோர் கடந்த வாரம் நேரில் ஆய்வு மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் மற்றும் நிவாரணம் வழங்கினர். இந்நிலையில், வெள்ளியன்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து மணிப்பூர் ஆய்வு தொடர்பான அறிக்கையை கடிதம் வடிவில் வழங்கினார் பிருந்தா காரத். இந்த சந்திப்புக்குப்பின் பிருந்தா காரத் கூறுகையில்,‘‘மணிப்பூரில் பாலியல் வன்கொடுமை மற்றும் பிற வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரங்கள் பற்றிய விவரங்களை குடியரசுத் தலைவர் கேட்டறிந்தார். இந்த சம்பவங்கள் குறித்து அவர் வருத்தம் தெரிவித்து, மணிப்பூர் ஆளுநரிடம் வன்முறை பற்றி பலமுறை பேசியுள்ளேன் என்றும், நிவாரண முகாம்களில் நிலவும் அவலநிலை குறித்து கவலையும் தெரிவித்தார்’’ எனக் கூறினார்.