states

img

மணிப்பூரில் வன்முறையில் பலி எண்ணிக்கை 73 ஆக உயர்வு

மணிப்பூர் மாநிலத்தின் பழங்குடியினம் அல்லாத பிரிவினருக்கும், பழங்குடியின பிரிவினருக்கும் ஏற்பட்ட மோதல்களில் பலியானவர்கள் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது. 

மணிப்பூர் மாநிலத்தின் பழங்குடியினம் அல்லாத மெய்டெய் பிரிவினருக்கும், பழங்குடியின குக்கி பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் இருதரப்பினரும் மோதிக் கொண்டனர். வீடுகள், கடைகள், வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டன.  வன்முறையைக் கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு இடங்களில் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு இருப்பதுடன், அசாம் ரைபிள்ஸ் மற்றும் ராணுவம் வரவழைக்கப்பட்டுப் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டது. இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று புதிய வன்முறை வெடித்த நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்தி 15க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு தீ வைப்பட்டன. தற்போது வரை மணிப்பூர் மாநிலத்தின் நடந்த வன்முறையில் பலியானவர்கள் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது. 

இந்த சூழலில், அம்மாநில முதல்வர் பிரேன் சிங் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஆலோசனை நடத்த விமானம் மூலம் தில்லிக்கு விரைந்துள்ளார்.