பாஜகவின் பிரிவினை அரசியலால் மணிப்பூரில் குக்கி - மெய்டெய் இன மக்கள் கடந்த 8 மாதங்களாக ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு வன் முறையில் ஈடுபட்டு வருகின்ற னர். மாநிலத்தில் அமைதி திரும்ப ஒன்றிய, மாநில பாஜக அரசுகள் எவ்வித நடவடிக்கையும் எடுக் காத நிலையில், மணிப்பூர் வன் முறையில் பலியானவர்களின் எண்ணிக்கை 200-யை நெருங்கி யுள்ளது. பல ஆயிரம் மக்கள் சொந்த மாநிலத்திலேயே அகதி களாக இடம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். மணிப்பூரில் அமைதி நிலவுவதாக அம்மாநில பாஜக முதல்வர் பைரன் சிங் அடிக்கடி அறிக்கை வெளியிட்டாலும், இன் னும் ஆங்காங்கே வன்முறை சம்ப வங்கள் அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றன.
தொப்புள்கொடி உறவு
மணிப்பூரின் குக்கி இன பழங் குடி மக்களும், மிசோரத்தில் வசிக் கும் பழங்குடியின மக்களும் தொப் புள்கொடி உறவு போன்றவர்கள். இதனால் மணிப்பூர் வன்முறை யில் இருந்து உயிர்பிழைத்து தங் கள் மாநிலத்திற்கு வரும் குக்கி இன மக்களுக்கு அப்போதைய ஜோரம் தங்கா தலைமையிலான மிசோரம் அரசு ஆதரவுக் கரம் நீட்டி, அவர்களுக்கு அனைத்து நிவாரண உதவிகள், தங்குமிடம் அளித்து வந்தது. தற்பொழுது மிசோரத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ள நிலையில், புதி தாக பொறுப்பேற்றுள்ள சோரம் மக்கள் இயக்கம் தலைமையி லான லால்துஹோமா அரசும் குக்கி இன மக்களுக்கு ஆதர வாக களமிறங்கியுள்ளது. சமீ பத்தில் ஊடகம் ஒன்றுக்கு லால் துஹோமா அளித்த பேட்டியில், “மணிப்பூரில் உள்ள பழங்குடி யின மக்கள் சரியாக நடத்தப்பட வில்லை. மோரேவில் (மணிப்பூர் மாநில பகுதி) மிசோரம் மக்களை காவல் துறையினர் தொந்தரவு செய்யக் கூடாது” என கூறினார்.
பைரன் சிங் மிரட்டல்
லால்துஹோமாவின் கருத் துக்கு எதிர்ப்பு தெரிவித்து மிசோ ரம் அரசை மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் மிரட்டல் விடும் நோக் கில் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “மோரே தொடர் பாக மிசோரம் மாநிலத்தின் புதிய முதல்வர் கூறிய கருத்து துர திர்ஷ்டவசமானது. இது அரசிய லமைப்பு சட்டத்துக்கு அப்பாற் பட்டது. ஏனெனில் மணிப்பூரில் என்ன நடந்தாலும் அது எங்கள் மாநிலத்தின் உள்விவகாரம். குக்கி, நாகா, மெய்டெய், பங்கல் உள்ளிட்ட பல்வேறு சமூகத்தினர் வசிக்கும் பொழுது, மோரேவில் என்ன நடக்கிறது என்பது லால் துஹோமாவுக்கு முற்றிலும் தெரி யாது. ஆனால் அவர் கருத்து தெரி வித்து வருகிறார். லால்துஹோமா வுக்கு எனது தீவிரமான கோரிக்கை என்னவென்றால், அமைதி திரும்ப உதவுங்கள் என்பதே. மிசோ ரத்தில் நிலவிய புரூ அகதிகள் பிரச் சனை குறித்து நான் கருத்து எது வும் தெரிவிக்கவில்லை. ஆனால் மணிப்பூர் விவகாரத்தில் மிசோ ரம் தலையிடுவது நியாயமற்றது” எனக் கூறினார்.