states

img

அமித்ஷாவைக் கண்டித்து மிசோரம் பாஜக துணைத் தலைவர் ராஜினாமா!

புதுதில்லி, ஜூலை 15 - மணிப்பூர் மாநில கலவரத்தில் கிறிஸ்தவ தேவாலயங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்ட விவகாரத்தில், ஒன்றிய - மாநில பாஜக அரசுகளைக் கண்டித்து, மிசோரம் மாநில பாஜக துணை தலைவர் ஆர். வன்ரம்ச்சு வாங்கா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுதொடர்பாக ராஜினாமா கடிதம் ஒன்றையும் பாஜக தலைமை க்கு ஆர். வன்ரம்ச்சுவாங்கா அனுப்பி வைத்துள்ளார்.  அதில், “மணிப்பூர் மாநிலத்தில் சமீபத்தில் வெடித்த இனக்கலவ ரத்தின் போது, 357 கிறிஸ்தவ தேவால யங்கள், பாதிரியார்களின் குடியிருப்பு கள் மற்றும் தேவாலயங்களுக்குச் சொந்தமான அலுவலக கட்டடங்கள், மெய்டெய் சமூகத்தினரால் தீ வைத்துக் கொளுத்தப்பட்டு உள்ளது. தேவாலயங்கள் எரிக்கப்பட்டதை மணிப்பூர் மாநில முதல்வர் கண்டிக்க வில்லை. அதேபோல் ஒன்றிய உள் ள்துறை அமைச்சர் அமித் ஷா இம்பாலுக்கு வந்தபோதும் தேவால யங்கள் எரிக்கப்பட்டது குறித்து எதுவும் பேசவில்லை. ஒன்றிய - மாநில பாஜக அரசின் இந்த மவுனம் கிறிஸ்தவ  தேவாலயங்கள் தீக்கிரையாக்கப் பட்டதை ஆதரிப்பதாக தோன்று கிறது. கிறிஸ்தவர்களுக்கும், கிறிஸ் தவ மதத்துக்கும் எதிராக இழைக் கப்படும் இந்த குற்றச் செயலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், மிசோரம் மாநில பாஜக மாநிலத் துணைத் தலைவர் பதவியிலிருந்து உடனடியாக ராஜினாமா செய்கி றேன்” என்று வன்ரம்ச்சுவாங்கா குறிப் பிட்டுள்ளார். மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் மிசோரம் மாநிலமும் ஒன்றாகும். இங்கு இந்த ஆண்டு இறுதி யில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பொது சிவில் சட்டம் குறித்த பேச்சு, கிறிஸ்தவ பழங்கு டிகள் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, மாநில பாஜக துணை தலைவர் ஒருவரே, பதவியை ராஜினாமா செய்தி ருப்பது பாஜக-வினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.