states

img

மும்பை: அடுக்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 9 பேர் படுகாயம்

மகா​ராஷ்​டிர மாநி​லம்,  மும்பை​யில் கிழக்கு பந்த்ரா பகு​தியைச் சேர்ந்த பெஹ்ரம் நகரில் அமைந்துள்ள அடுக்​கு​மாடி குடி​யி​ருப்​பு கட்டடம் இடிந்து விழுந்ததில் 9 பேர் காயம் அடைந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் பெஹ்ராம் நகரில் இன்று 5 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட 9 பேரை மீட்புப் படையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் ஒரு பெண்மணிக்கு எலும்பு முறிவும், இன்னொருவர் தீவிர சிகிச்சைப் பிரிவிலும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஜன. 22 ஆம் தேதி மத்​திய மும்பை​யில் டாா்​டியோவியில்  உயா் அடுக்​கு​மாடி குடி​யி​ருப்​பின் 19-ஆவது தளத்​தில் ஏற்​பட்ட பெரும் தீ வி​பத்​தில் 7 போ் பலியாகினர். 23 போ் படு​கா​ய​மடைந்​த​னர் என்பது குறிப்பிடத்தக்கது.