மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் கிழக்கு பந்த்ரா பகுதியைச் சேர்ந்த பெஹ்ரம் நகரில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்ததில் 9 பேர் காயம் அடைந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் பெஹ்ராம் நகரில் இன்று 5 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட 9 பேரை மீட்புப் படையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் ஒரு பெண்மணிக்கு எலும்பு முறிவும், இன்னொருவர் தீவிர சிகிச்சைப் பிரிவிலும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஜன. 22 ஆம் தேதி மத்திய மும்பையில் டாா்டியோவியில் உயா் அடுக்குமாடி குடியிருப்பின் 19-ஆவது தளத்தில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 7 போ் பலியாகினர். 23 போ் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.