பெங்களூரு, ஜன.28- பெங்களூருவைச் சேர்ந்த மூத்த எழுத்தா ளரும், பத்திரிகையாள ருமான அமுதவன் உடல் நலக்குறைவால் சனி யன்று அதிகாலை கால மானார். அவருக்கு வயது 71. அமுதவனின் உடல் அஞ்சலிக்காக அவரது ‘ஆனந்தம்’ இல்லத்தில் வைக் கப்பட்டது. பெங்களூருவை சேர்ந்த தமிழ் அமைப்பினரும், இந்திய தொலைபேசி தொழிற்சாலையின் தொழிற்சங்கத்தி னரும் அஞ்சலி செலுத்தினர். பின்னர் மாலையில் கல்பள்ளி கல்லறையில் அமு தவனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அமுதவனின் மறைவுக்கு நடிகர் சிவ குமார், கவிஞர் அறிவுமதி உ ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 1980-களில் இந்திய தொலைபேசி தொழிற்சாலையில் பணியாற்றிக் கொண்டே பத்திரிகையாளர் சாவி மூலம் இதழியல் துறைக்குள் நுழைந்த அமுத வன், கல்கி, ஆனந்த விகடன், குமுதம், பிலிமாலயா உள்ளிட்ட இதழ்களில் சுயா தீன பத்திரிகையாளராக பணியாற்றினார். தமிழ் திரைப்படங்கள் குறித்தும், கர்நாடக அரசியல் குறித்தும் ஏராளமான கட்டுரை களை எழுதினார். இது தவிர சிறுகதை, தொடர்கதை, கவிதை, நாவல் ஆகிய வற்றையும் எழுதியுள்ளார்.