பெங்களூரு, மே 20 - காங்கிரஸ் மூத்த தலைவர் சித்த ராமையா, கர்நாடக மாநில முதல்வ ராக இரண்டாவது முறையாக பதவி யேற்றுக் கொண்டார். அவருடன் துணை முதல்வராக டி.கே. சிவ குமார் மற்றும் 8 அமைச்சர்களும் பதவியேற்றனர். புதிய அமைச்சர்களுக்கு, கர் நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவிப் பிரமாணமும், ரகசியக்காப் புப் பிரமாணமும் செய்துவைத்தார். பெங்களூரு காண்டிவரா மைதா னத்தில், சனிக்கிழமையன்று பிற்பகல் 12.30 மணியளவில் பதவியேற்பு விழா, கோலாகலமாக நடைபெற்றது. இதில், அகில இந்திய காங்கி ரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலா ளர்கள் பிரியங்கா காந்தி, கே.சி. வேணுகோபால், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜே வாலா, தேசியவாத காங்கிரஸ் தலை வர் சரத்பவார், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பொதுச்செயலா ளர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் து. ராஜா, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பருக் அப்துல்லா, மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெகபூபா முப்தி, சிவசேனா தலைவர் உத்தவ் தாக் கரே, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், மாநில முதல்வர்கள் நிதிஷ்குமார் (பீகார்), மு.க. ஸ்டா லின் (தமிழ்நாடு), அசோக் கெலாட் (ராஜஸ்தான்), பூபேஷ் பாகேல் (சத்தீஸ்கர்), சுக்விந்தர்சிங் சுகு (இமாசலப் பிரதேசம்), ஹேமந்த் சோரன் (ஜார்க்கண்ட்), துணை முதல் வர் தேஜஸ்வி (பீகார்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, நிகழ்ச்சி யின் நிறைவில் உரையாற்றினார். அப்போது, கர்நாடக முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற தலைவர்களுக்கு நன்றி தெரி வித்துக் கொண்டார். மேலும், இனி கர்நாடகத்தில் மகளிர் பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம். வாக் குறுதிப்படி, கர்நாடக மக்களுக்கு இலவசமாக 200 யூனிட் மின்சாரம் வழங்கப்படும். காங்கிரஸ் தலை மையிலான அரசு, மக்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்றும் என்று அறிவித்தார். 75 வயதாகும் சித்தராமையா, கர்நாடகத்தின் 24-ஆவது முதல்வரா வார். ஏற்கெனவே, அவர் 2013 மே மாதம் முதல் 2018 மே மாதம் வரை முதல்வராக இருந்துள்ளார். கர்நாட கத்தில் ஐந்தாண்டு ஆட்சிக்காலம் முழுமையாக பதவியில் இருந்த 3 முதல்வர்களில் சித்தராமையாவும் ஒருவர். தற்போது இரண்டாவது முறையாக அவர் முதல்வராக பதவி யேற்றுக் கொண்டுள்ளார். சித்தராமையாவின் அமைச்சர வையில், முதற்கட்டமாக துணை முதல்வர் டி.கே. சிவகுமார், எம்.பி. பாட்டீல், டாக்டர் ஜி. பரமேஷ்வர், கே.எச். முனியப்பா, கே.ஜே. ஜார்ஜ், சதீஷ் ஜர்கிஹோலி, மல்லி கார்ஜூன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே, ராமலிங்கரெட்டி, ஜமீர் அகமது என மொத்தம் 10 பேர் இடம்பெற்றுள்ளனர். இவர்களுக் கான துறைகள் பின்னர் அறிவிக்கப் படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், அமைச்சரவை விரைவில் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.