states

சிஐடியு 17 ஆவது அகில இந்திய மாநாட்டு வரவேற்புக் குழு அமைப்பு

பெங்களூரு, ஜூலை 27 - 2023 ஜனவரி 18-22 தேதிகளில் சிஐடியுவின் 17 ஆவது அகில இந்திய மாநாடு கர்நாடகாவில் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை கர்நாடகா மாநிலக்குழு தீவிரமாக செய்து வருகிறது.  மாநாட்டிற்கான வரவேற்புக்குழு அமைப்புக் கூட்டம் கடந்த ஜூலை 5 அன்று பெங்களூருவில் நடைபெற்றது. சிஐடியு தலைவர் கே.ஹேமலதா, கூட்டத்தை துவக்கி வைத்தார். சிஐடியு மாநிலத் தலை வர் எஸ்.வரலட்சுமி தலைமை வகித்தார்.  இந்த கூட்டத்தில் சிஐடியு தலைவர்கள், புகழ்பெற்ற கலைஞர்கள், இசைக் கலைஞர்கள், கவிஞர்கள், விஞ்ஞானிகள், சமூக சேவகர்கள் மற்றும் ஜனநாயக அமைப்பைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். சிஐடியு மாநிலச் செயலாளர் மீனாட்சி சுந்தரம், வரவேற்பு குழுவை முன்மொழிந் தார். மாநாட்டிற்கு தேவையான நிதியை திரட்டுவதற்கான திட்டத்தை முன்வைத்தார்.  பிரபல இசையமைப்பாளர் ஹம்சலேகா, தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பெறும் தன்னுடைய ஒரு நாள் ஊதியத்தை மாநாட்டு நிதிக்கு அளிப்பதாக தெரிவித்தார். பலரும் தங்களது ஒரு நாள் ஊதியத்தை மாநாட்டு நிதிக்கு அளிப்பதாக தெரிவித்தனர். பிஎஸ்என்எல்இயு, ஏஐஐஇஏ, பெபி, ஏகேஎஸ்ஜிஇஎப் மற்றும் தோழமை அமைப்பினரும் தங்களது பங்களிப்பை மாநாட்டிற்கு செய்வதாக உறுதியளித்தனர்.

இசையமைப்பாளர் ஹம்சலேகா, எழுத்தாளர் எஸ்.ஜி.சித்தராமையா, கவிஞர்கள் வசுந்தரா பூபதி, ஆர்.பூர்ணிமா, சமூக சேவகர் எஸ்.ஆர்.ஹிரேமத், மூத்த வழக்கறிஞர் கே.சுப்பாராவ், இன்சூரன்ஸ் ஊழியர் சங்க முன்னாள் தலைவர் அமானுல்லா கான், விவசாயிகள் சங்க தலைவர் ஜி.சி. பையாரெட்டி, விவசாயத் தொழிலாளர் சங்க தலைவர் ஜி.என்.நாகராஜ் ஆகியோர் உரையாற்றினர். அறி வியலாளர் எஸ்.சாட்டர்ஜி, மூத்த தலைவர் வி.ஜே.கே.நாயர், சிபிஎம் மாநிலச் செய லாளர் யு.பசவராஜ் மற்றும் மாணவர், வாலி பர், மாதர், டிஎச்எஸ் சங்கத் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். சிஐடியு பெங்களூரூ தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் பி.என்.மஞ்சுநாத் வர வேற்றார். வடக்கு மாவட்டச் செயலாளர் பி. முனிராஜூ நன்றி கூறினார். மாநில செய லாளர் கே.மகான்தேஷ் ஒருங்கிணைத்தார்.  மாநாட்டுப் பணிகளை மேற்கொள்ள 27-க்கும் மேற்பட்ட குழுக்களை செயல்படுத்துவது, மாநாடு குறித்த தகவலை மாநிலம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் மக்களிடம் கொண்டு செல்வது, “மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்து ஒன்றிணைந்து போராடுவோம்” என்ற மாநாட்டு முழக்கத்தையும், வர்க்க ஒற்றுமையை நிலைநாட்டி, பிரிவினையை உருவாக்கும் வகுப்புவாதக் கொள்கைகளை எதிர்த்துப் போராடுவது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில், வரவேற்புக் குழுவின் கவுரவத் தலைவராக கே.சுப்பாராவ், தலைவராக அமானுல்லா கான், செயல் தலைவராக எஸ்.வரலட்சுமி, பொதுச் செயலாளராக மீனாட்சி சுந்தரம் மற்றும் குழுவின் பொருளாளராக பி.பரமேஸ்வர் உள்ளிட்டோர் அடங்கிய வரவேற்புக் குழு அமைக்கப்பட்டது.