states

img

700 பாலியல் வன்குற்றப் புகார்களும் போலியானவையாம்!

பாஜக கூட்டணி கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் (ஜேடிஎஸ்) தலை வரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடாவின் மகனுமான ஹெச்.டி.ரேவண்ணாவின் மகன் பிரஜ்வல் ரேவண்ணா 300 பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள் ளார். இதுதொடர்பாக 3000க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் ஏப்ரல் 25 அன்று வெளியாகி நாட்டையே உலுக்கிய நிலையில், இந்த சம்பவம் கசிந்த பின்பு பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு தப்பி ஓடிவிட்டார். தற்போது அவர் துபாயில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந் நிலையில், மாநில மகளிர் ஆணை யத்தின் பரிந்துரையின் பேரில் இந்த விவகாரத்தை கர்நாடக சிறப்பு புல னாய்வு துறை விசாரித்து வருகிறது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணாவை  கைது செய்ய கர்நாடக சிறப்பு புல னாய்வு போலீசார் ரெட் கார்னர், புளூ கார்னர் நோட்டீஸ் மூலம் அடுத்தகட்ட நடவடிக்கையை துரிதப்படுத்தி யுள்ளனர்.

பிரஜ்வல் ரேவண்ணா மட்டு மின்றி, அவரது தந்தை ஹெச்.டி. ரேவண்ணா மீதும் அவரது வீட்டில் பணிபுரியும் பணிப்பெண் பாலியல் புகார் அளித்துள்ளார். புகார் அளித்த பெண்ணை ஹெச்.டி.ரேவண்ணா மற்றும் உதவியாளர்கள் கடத்திய நிலையில், இந்த விவகாரம் தொ டர்பாக ஹெச்.டி.ரேவண்ணா உள்ளிட்ட 3 பேரை கர்நாடக போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.  

திசை திருப்பும் தேசிய மகளிர் ஆணையம்
பிரஜ்வல் ரேவண்ணா மீது இதுவரை 700 பெண்கள் புகார்கள் அளித்துள்ளனர். மேலும் பல பெண்கள் புகார் அளிக்க தயாராக உள்ளனர். இதனால் பல புதிய சம்ப வங்கள் வெளிச்சத்திற்கு வர வாய்ப்பு உருவாகியுள்ள சூழலில், பாஜகவின் கூட்டணி கட்சியான ஜேடிஎஸ் கட்சி யின் அரசியல் பின்புலம் கடும் சேதாரத்தை சந்திக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. இதனால் இந்த விவகாரத்தை திசை திருப்ப மோடி அரசின் உதவியுடன் ஜேடிஎஸ் கட்சி பல்வேறு சித்து விளையாட்டுகளை அரங்கேற்ற முயற்சித்து வருகிறது. இந்நிலையில், மோடி அரசின் கைப்பாவையாக இருக்கும் தேசிய மகளிர் ஆணையம், பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆதரவாக களமிறங்கி, பிரச்சனையை திசை திருப்பும் வேலையில் ஈடுபட்டுள்ளது. 

இந்நிலையில், “பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராகப் புகார் அளிக்கும்படி தனக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக ஹாசன் மாவட் டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தங்க ளுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும், பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதி ராக 700 பெண்கள் புகார் அளித்துள் ளதாக கூறப்படும் விவகாரம் உண்மையல்ல” எனவும் தேசிய மகளிர் ஆணையம் கூறியுள்ளது. இதுதொடர்பாக கர்நாடகா காவல் துறையிடம் விளக்கம் கேட்கப்படும் என்றும் தேசிய மகளிர் ஆணையம் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது. 

மணிப்பூர் விவகாரம், மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் வன் முறையில் பாஜகவிற்கு ஆதரவாகச் செயல்பட்டது போல, தற்போது பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாஜகவின் கூட்டணி கட்சியான ஜேடிஎஸ் கட்சிக்கு ஆதரவாக தேசிய மகளிர் ஆணையத்தின் அறிக் கைக்கு நாடு முழுவதும் கண்ட னங்கள் குவிந்து வருகின்றன. 

வீடியோ பரப்பலை  நிறுத்துங்க... மானம் போகுது...

அலறும் எச்.டி.குமாரசாமி 

பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் வன்முறை தொடர்பான 3000 ஆபாச வீடியோக்கள் பென் டிரைவ் மூலமாக சமூக வலைத் தளங்களில் பரவி நாடு முழுவதும் வைரலானது. மதச்சார் பற்ற ஜனதா தள (ஜேடிஎஸ்) கட்சியைச் சேர்ந்தவருக்கு தெரியா மல் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் கசிய வாய்ப்பில்லை. இது நாடே அறிந்தது தான். பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தால் ஜேடிஎஸ் கட்சியின் இமேஜ், சுக்கு நூறாக நொறுங்கியுள்ள நிலையில், கட்சியின் இமேஜை காப்பாற்ற ஜேடி எஸ் தலைவரும், பிரஜ்வல் ரேவண்ணாவின் சித்தப்பாவுமான எச்.டி. குமாரசாமி கண்டதையும் கூறி பிரச்சனையை திசை திருப்ப முயன்று வருகிறார். 

ஏற்கெனவே காங்கிரஸ் மூத்த தலைவரும், கர்நாடக துணை முதல்வருமான டி.கே.சிவகுமார் தான் ஆபாச வீடியோக்களை வெளியிட்டார் என கூறினார். தற்போது, “ஹாசன் மக்களவை தொகுதி  முழுவதும் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக் கள் 25,000 பேருக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது; வீடியோ வைரலை நிறுத்த வேண்டும்; இந்த வீடியோ விவகாரத்தில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்; இந்த நீதி விசாரணை முடிவடையும் வரை கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பதவி விலக வேண்டும்” என கூறியுள்ளார்.

தேசிய மகளிர் ஆணைய அறிக்கையை கண்டுகொள்ளாத மாநில ஆணையம்

பிரஜ்வல் ரேவண்ணாவின் வீடியோக்கள் அனைத்தும் கர்நாடக மகளிர் ஆணையத்திடம் உள்ளது. வீடி யோக்களில் உள்ள பெண்களை அடையாளம் கண்டு விசாரணை நடத்தி வருகிறது. மேலும்,”கர்நாடக மகளிர் ஆணையத்தில் திறமையான அதிகாரிகள் உள்ளனர். அதனால் பெண்கள் தைரியமாக புகார் அளிக்கலாம்” என்று கர்நாடக மகளிர் ஆணைய தலைவர் நாகலட்சுமி கூறி யுள்ளார். நாகலட்சுமியின் நம்பிக்கை வார்த்தையால், பிரஜ்வல் ரேவண்ணாவால் பாதிக்கப்பட்ட 700 பெண்கள் புகார் அளித்துள்ளனர். மேலும் பல பெண்கள் புகார்  அளிக்க தயாராக உள்ளதாகவும் தகவல் வெளியாகி யுள்ளது. பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் வக்கிரம் கசிந்த பின் அதனை வெளியுலகிற்கு அம்பலப்படுத்த கர்நாடக மகளிர் ஆணையம் தீவிர நடவடிக்கை மேற்கொண் டுள்ளது. இந்நிலையில், தேசிய மகளிர் ஆணையத்தின் சர்ச்சைக்குரிய அறிக்கையை பற்றி கண்டுகொள்ளாமல் விசாரணையின் அடுத்த கட்ட நகர்வை நோக்கி பயணித்து வருகிறது கர்நாடக மகளிர் ஆணையம். கர்நாடக மகளிர் ஆணையம் அமைதி பாஜக - ஜேடிஎஸ் - தேசிய மகளிர் ஆணையத்திற்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.