பெங்களூரு, ஜூன் 26- பெங்களூரில் நடைபெற்று வரும் ரஞ்சிக் கோப்பை இறுதிப் போட்டியில் மும்பை, மத்தியப்பிர தேச அணிகள் மோதின. மும்பை அணி முதல் இன்னிங்சில் 374 ரன் குவித்தது. பின்னர், முதல் இன்னிங்சை ஆடிய மத்திய பிரதேசம் 536 ரன்கள் எடுத்தது. 2-ஆவது இன்னிங்சில் மும்பை அணி 269 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, களமிறங்கிய மத்திய பிரதேசம் 29.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்து, வலுவான மும்பை அணி யை வீழ்த்தி முதல் முறையாக ரஞ்சிக் கோப்பையை கைப்பற்றி யுள்ளது. மத்திய பிரதேச வீரர் சுபம் சர்மா ஆட்ட நாயகன் விருதும், மும்பை வீரர் சர்ப்ராஸ் கான் தொடர் நாயகன் விருதும் வென்ற னர்.