பெங்களூரு, மே 27- கர்நாடக மாநிலத்தில், ஏற்கெனவே 8 அமைச்சர்கள் பதவியேற்ற நிலை யில், சனிக்கிழமையன்று மேலும் 24 பேர் புதிய அமைச்சர்களாக பதவி யேற்றுக் கொண்டனர். 224 இடங்களைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில், 135 இடங்கள் என்ற தனிப்பெரும்பான்மை யுடன், பாஜக-வை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. இதையடுத்து, கடந்த மே 20 அன்று, காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா, கர்நாட கத்தின் 24-ஆவது முதல்வராக பதவி யேற்றுக் கொண்டார். மாநில காங்கி ரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் துணை முதல்வரானார். இவர்களுடன், எம்.பி. பாட்டீல், டாக்டர் ஜி. பரமேஷ்வர், கே.எச். முனி யப்பா, கே.ஜே. ஜார்ஜ், சதீஷ் ஜர்கி ஹோலி, மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே, ராமலிங்க ரெட்டி, ஜமீர் அகமது என 8 அமைச் சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். எனினும், இவர்களுக்கான துறை கள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அமைச்சரவை விரிவாக்கத்திற்குப் பின் துறைகள் ஒதுக்கீடு அமையும் என்று கூறப்பட்டது. அந்த வகையில், முதல்வர் சித்தராமையா வெள்ளி யன்று காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோரை தில்லியில் சந்தித்து, கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக ஆலோசனை மேற் கொண்டார்.
இந்த பின்னணியில், சனிக்கிழமை யன்று கர்நாடக அமைச்சரவை விரி வாக்கம் நடந்துள்ளது. எச்.கே. பாட் டீல், கிருஷ்ணபைரே கவுடா, என். செலுவராயசாமி, கே. வெங்கடேஷ், எச்.சி. மகா தேவப்பா, ஈஸ்வர் கண்ட்ரே, கியாத்தசந்திர என். ராஜண்ணா, தினேஷ் குண்டுராவ், சரணபசப்பா தர்ஷனாப்பூர், சிவா னந்த பாட்டீல், திம்மாபூர் ராமப்பா பாலப்பா, எஸ்.எஸ். மல்லிகார்ஜுனா, தங்கடகி சிவராஜ் சங்கப்பா, சரண பிரகாஷ் ருத்ரப்பா, பாட்டீல் மங்கள் வைத்யா, லட்சுமி ஆர். ஹெப்பால்கர், ரகீம் கான், டி. சுதாகர், சந்தேஷ் எஸ். லாட், என்.எஸ். போஸ்ராஜூ, பி.எஸ். சுரேஷ், மது பங்காரப்பா, டாக்டர் எம்.சி. சுதாகர், பி. நாகேந்திரா ஆகிய 24 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டுள்ளனர். இவர்களுக்கு, பெங்களூருவில் உள்ள ராஜ்பவன் கண்ணாடி மாளிகை யில் காலை 11.45 மணிக்கு, ஆளுநர் தாவர் சந்த் கெலாட் பதவிப்பிரமாண மும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். விழாவில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவகுமார், அமைச்சர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். புதிய அமைச்சர்களில், 6 பேர் லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த வர்கள். 4 பேர் ஒக்கலிகா பிரிவினர். 3 பேர் பட்டியல் வகுப்பினர். 2 பேர் பழங்குடியினர். 5 பேர் இதர பிற்படுத் தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். முஸ்லிம், ஜெயின், பிராமணர் மற்றும் நாம்தாரி ரெட்டி சமூகத்தினர் தலா ஒரு பிரதிநிதியைக் கொண்டுள்ளனர். அமைச்சரவையில் ஒரு பெண் (லட்சுமி ஆர். ஹெப்பால்கர்) மட்டுமே இடம் பெற்றுள்ளார். புதிய அமைச்சர்களின் பதவி யேற்பு மூலம், சித்தராமையா தலை மையிலான அமைச்சரவையின் பலம் 34 என்ற முழு எண்ணிக்கையை எட்டி யுள்ளது.