states

பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஓடும் கர்நாடக பாஜக எம்எல்ஏக்கள்!

பெங்களூரு, ஏப்.1-  கர்நாடகத்தில் பாஜக எம்எல்ஏ-க்கள்  பலர் அடுத்தடுத்து பதவியை ராஜினாமா  செய்துவிட்டு ஓட்டம் பிடிக்க ஆரம்பித் துள்ளனர். கர்நாடக சட்டப்பேரவைக்கு மே 10 அன்று தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு கள் எண்ணப்பட்டு மே 13 அன்று முடிவு கள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலை யில், தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமையப் போகின்றன என்பதற்கு இப்போதே தெளி வான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்து விட்டன. அந்த அறிகுறிகள்தான், பாஜக  எம்எல்ஏக்கள் பலர் பதவியை ராஜினாமா  செய்து விட்டு ஓட்டம் பிடிக்க ஆரம்பித்தி ருப்பது ஆகும். மார்ச் மாதத் துவக்கத்தில், பாஜக வைச் சேர்ந்த சட்ட மேலவை உறுப்பி னர்கள் புட்டன்னா, பாபுராவ் சுன்சன்சூர் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்து காங்கிரஸில் இணைந்தனர். மார்ச் 27 அன்று மதச்சார்பற்ற ஜனதா தளம்  எம்எல்ஏ எஸ்.ஆர். ஸ்ரீனிவாஸ் அக்கட்சி யில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தார்.  இந்நிலையில்தான், குட்லிகி சட்டமன்ற  தொகுதி பாஜக எம்எல்ஏ என்.ஒய். கோபால கிருஷ்ணாவும் தனது பதவியை ராஜி னாமா செய்து விட்டு ஓட்டம் பிடித்துள்ளார். தன்னுடைய ராஜினாமா கடிதத்தை சபா நாயகர் விஸ்வேஷ்வர் ஹெக்டே ககேரி அலுவலகத்தில் வழங்கியுள்ளார். என்.ஒய். கோபாலகிருஷ்ணா, முன்பு காங்கிரஸ் கட்சியில்தான் இருந்தார்.  சித்ர துர்கா மாவட்டம் மொலகல்முரு தொகுதி யில் 1997, 1999, 2004, 2008 ஆகிய ஆண்டு களில் நான்குமுறை வெற்றி பெற்றிருக்கி றார். கடந்த 2018-ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காததால் கட்சியில்  இருந்து வெளியேறி பாஜக-வில் சேர்ந்தார். அப்போது குட்லிகியில் வாய்ப்பை பெற்று  அதில் வெற்றியும் பெற்றார். இந்நிலை யில்தான் தற்போது பாஜக-விலிருந்து வெளியேறியுள்ளார்.  அர்கல்குட் தொகுதி மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்எல்ஏ ஏ.டி. ராமசாமியும் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு கட்சியிலிருந்து வெளியேறியுள்ளார்.