states

img

கர்நாடகா: பாஜக எம்எல்சி ஆயனூர் மஞ்சுநாத் ராஜினாமா

பெங்களூரு,ஏப்.19- கர்நாடக சட்டசபை தேர்தல் மே 10-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தற்போது வேட்பாளர் வேட்புமனுத்தாக்கல் நிகழ்வு நடைபெற்று வருகிறது.  தேர்தலுக்கு இன்னும் சரியாக 20 நாட்கள் உள்ள நிலையில், ஆளும் பாஜக கட்சிக்குள் தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காத அதிருப்தியில் முன்னணி தலைவர்கள், முன்னாள் முதல்வர், துணை முதல்வர் என பல்வேறு தலைவர்களும் பாஜகவை கை கழுவி வரு கின்றனர். இந்நிலையில், சீட் கிடைக்காத அதிருப்தி யில் கர்நாடக பாஜக மூத்த தலைவரும், எம்எல்சியுமான ஆயனூர் மஞ்சுநாத், தனது எம்எல்சி பதவி கட்சி பதவி களை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.  ராஜினாமா அறிவிப்பு வெளியிட்ட பின்பு மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சி யில் இணைந்தார்.ஆயனூர் மஞ்சுநாத் . ஏற்கெனவே முன் னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், துணை முதல்வர் லட்சுமண் சவதி ஆகியோர் பாஜகவில் இருந்து விலகி, காங்கிரஸ் கட்சியில் இணைந் தனர் என்பது குறிப்பிடத் தக்கது.