states

img

பிரகலாத் ஜோஷி பிரிவைச் சேர்ந்தவர்கள் நாட்டில் வன்முறையைத் தூண்டுகின்றனர்!

ஜேடிஎஸ் தலைவர் எச்.டி. குமாரசாமி அதிரடி

பெங்களூரு, பிப். 8 - பிரகலாத் ஜோஷியை கொல்லைப் புற வழியாக கர்நாடகத்தின் முதல்வ ராக்க பாஜக திட்டமிடுவதாகவும், ஜோஷி பிராமணர் வகுப்பிலேயே காந்தியைக் கொன்ற கோட்சே-வின் பிரிவைச் சேர்ந்தவர் என்றும் எச்.டி. குமாரசாமி விமர்சித்துள்ளார். கர்நாடக முன்னாள் முதல்வரும், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தலைவருமான எச்.டி. குமாரசாமி இதுதொடர்பாக பெங்களூருவில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித் துள்ளார். அதில் மேலும் அவர் கூறி யிருப்பதாவது: கர்நாடகத்தில், பி.எம்.எஸ். கல்வி அறக்கட்டளை அரசின் சொத்து. அது தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் அஸ்வத் நாராயணும் ஒரு காரணம். இதற்குரிய ஆதாரங்களை வெளியிட்டு ள்ளோம். அந்த அறக்கட்டளையை நாங்கள் எக்காரணம் கொண்டும் விடமாட்டோம். மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சிக்கு வந்தால் அந்த அறக்கட்டளையை நாங்கள் அரசின் வசமே எடுத்துக் கொள்வோம்.  முன்பே, இதுகுறித்து விசாரணை நடத்துமாறு நான் சட்டப்பேரவையில் பேசினேன்.

ஆனால் அரசு அதை ஏற்க வில்லை. இந்த விவகாரத்தை நான் விட மாட்டேன். யாரோ ஒருவர் கொள்ளை யடிக்க பிஎம்எஸ் அறக்கட்டளையை அஸ்வத் நாராயண் வழங்கியுள்ளார். அவருக்கு வெட்கம் இல்லையா? என்று கேட்கிறேன்.  ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷியை கர்நாடக முதல்வராக்க  ஆர்எஸ்எஸ் - பாஜக திட்டமிட்டுள்ள தாக நான் கூறினேன். அவர் பிராம ணர் வகுப்பில் மகாத்மா காந்தியை கொன்ற கோட்சே பிரிவைச் சேர்ந்தவர். அந்த பிரிவு வன்முறையை தூண்டும் செயலை செய்கிறது. அதனால் அந்த பிரிவை நான் குறை கூறினேன். ஒட்டு மொத்த பிராமணர் வகுப்பையும் நான்  குறை கூறவில்லை. மற்ற பிராமணர்கள் மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். அதனால் பிரகலாத் ஜோஷி குறித்து நான் கூறிய கருத்தை திரும்பப் பெற மாட்டேன். அதற்காக நான் மன்னிப்பும் கேட்க மாட்டேன்.  கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில், வேறு ஒரு முகத்தை காட்டி  வாக்குகளை பெற்றுக்கொண்டு பிரகலாத் ஜோஷியை முதல்வராக்க பாஜக சதி செய்கிறது. இந்த சதியை  நான் மக்களிடம் அம்பலப்படுத்தி விட்டேன். இதில் என்ன தவறு உள்ளது? பிரகலாத் ஜோஷியை முதல்வர் வேட்பாளராக அறிவித்து, பாஜக தேர்தலைச் சந்திக்கத் தயாரா?.   இவ்வாறு குமாரசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.