states

img

மகாராஷ்டிரா - கர்நாடகா இடையிலான பகுதிகளை யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும்!

பெங்களூரு, டிச. 27 - மகாராஷ்டிரா - கர்நாடகா எல்லைப் பிரச்சனையில், சர்ச்சைக் குரிய பகுதிகளை யூனியன் பிரதேச மாக அறிவிக்க வேண்டும் என உத்தவ் தாக்கரே வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த 1960-ஆம் ஆண்டு மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட தில் இருந்தே, கர்நாடகா மற்றும் மகா ராஷ்டிரா இடையே உள்ள பெல காவி எல்லைப் பிரச்சனை இருந்து வருகிறது. பெலகாவியில் உள்ள சுமார் 80 மராத்தி மொழி பேசும் கிரா மங்களை மகாராஷ்டிரா விட்டுக் கொடுக்க விரும்பாத நிலையில், கர்நாடகா அதற்கு சொந்தம் கொண்டாடி வருகிறது. இதனால் மகாராஷ்டிரா அரசின் கோரிக்கையை ஏற்று, கடந்த  1957 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பெலகா வியை மறுசீரமைப்பது குறித்து முடி வெடுக்க ஒன்றிய அரசு மகாஜன் குழுவை அமைத்தது. குழு அமைக்கப்பட்ட போதிலும், இரு  மாநிலங்களுக்கும் எந்த உடன்பா டும் எட்டப்படவில்லை. இப்போது இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. எல்லை பிரச்சனையும் வலுவாக வெடித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் சாங்லி  மாவட்டத்தில் உள்ள கிராமங்கள் கடு மையான தண்ணீர் பஞ்சத்தை எதிர்கொண்டு வருவதால், கர்நாட காவுடன் இணைக்க வேண்டும் என்று அந்த கிராமங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியிருந்தார். 

இதனைக் கடுமையாக கண்டி த்த மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ‘‘அது போன்ற எந்த தீர்மானமும் இயற்றப் படவில்லை. மகாராஷ்டிராவில் எந்த கிராமமும் கர்நாடகாவுக்குச் செல்லாது. பெல்காம்-கார்வார்-நிபானி உள்ளிட்ட மராத்தி மொழி பேசும் கிராமங்களைப் பெற உச்ச  நீதிமன்றத்தில் மாநில அரசு வலு வாகப் போராடும்’’ என்றுகூறினார். அதைத் தொடர்ந்து இரு மாநி லங்களுக்கு இடையேயும் மோதல் போக்கு வலுத்தது. கர்நாடகா விற்குள் நுழைந்த மகாராஷ்டிரா பேருந்து தாக்கப்பட்டது. மகாராஷ் டிராவில் கர்நாடகா முதல்வரின் உரு வம் கறுப்பு மை பூசி அழிக்கப் பட்டது. இவ்வாறு நாளுக்கு நாள் மோதல் வலுத்து வருகிறது. எல்லைப் பிரச்சனை தொடர்பாக  மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசினார்.

அதேபோல் கர்நாடகா எம்.பி.க்களும், தேவைப் பட்டால் நானும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசுவேன் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார். இந்நிலையில் கர்நாடக ஆக்கிர மிப்பு மகாராஷ்டிரா பகுதிகளை யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என மகாராஷ்டிரா முன் னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே வேண்டுகோள் விடுத்துள்ளார்.  இதுகுறித்து மாநில சட்ட மேலவையில் அவர் பேசும்போது, ‘‘இது வெறும் மொழி சார்ந்த எல்லைப் பிரச்சனை மட்டும் இல்லை. இது மனிதநேயம் சம்பந்தப்பட்டது. எல்லையோர கிரா மங்களில் பரம்பரை பரம்பரையாக மராத்தி மொழி பேசும் மக்கள்  வசித்து வருகின்றனர். அவர்களின்  அன்றாட வாழ்க்கை, மொழி மற்றும் வாழ்க்கை முறை மராத்தியை சார்ந்தே உள்ளது. இது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், கர்நாடகா ஆக்கிரமிப்பு மகா ராஷ்டிரா பகுதிகளை யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும். இந்த விஷயத்தில் ஒன்றிய அரசு ஒரு காப்பாளனாக செயல்பட வேண்டும். முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இதுகுறித்து பேச வேண்டும். பெலகாவி நகராட்சி மகாராஷ்டிராவுடன் இணைய தீர்மானம் நிறைவேற்றிய போது, பெலகாவி நகராட்சிக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன’’ என்று தெரிவித்துள்ளார்.