கர்நாடகா மாநிலம் காவேரி மாவட்டத்தை சேர்ந்த பக்கிரப்பா என்ற விவசாயி, பெங்களூரில் தங்கி வேலை செய்து வரும் தனது மகனை பார்ப்பதற்காக வந்துள்ளார். பக்கிரப்பாவுக்கு பெங்களூரில் உள்ள ஜிடி மாலில் சென்று திரைப்படம் பார்க்க வேண்டும் என்று ஆசை இருந்துள்ளது. இதுபற்றி அவர் தனது மகன் நாகராஜிடம் கூற, நாகராஜ் ஜிடி வேர்ல்ட் மாலில் அமைந்திருக்கும் திரைய ரங்கில் திரைப்படம் பார்க்க டிக்கெட் முன்பதிவு செய்து, திங்களன்று நாகராஜ் தனது தந்தை பக்கிரப்பாவுடன் மாலு க்குச் சென்றார்.
அப்போது மாலில் பணியில் இருந்த காவலாளி பக்கிரப்பா வை தடுத்து நிறுத்தி,”வேட்டி அணிந்து மாலுக்குள் செல்ல அனுமதியில்லை. வீட்டுக்கு போய் பேண்ட் அணிந்து வாருங் கள்” என்று கூறினார். இதனை கேட்ட நாகராஜ்,”அப்பாவுக்கு பேண்ட் அணியும் பழக்கம் கிடை யாது. அவர் வேட்டி, சட்டை தான் அணிவார்” என தெரி வித்துள்ளார். தொடர்ந்து காவ லாளிகளின் மேற்பார்வையா ளர்கள்,”பெண்கள் நைட்டி அணிந்து வர தடை உள்ளது. அதேபோல் தான் ஆண்களுக் கும் சில ஆடைக்கட்டுப்பாடு உள்ளது” எனக் கூறினர்.
மாலில் நடந்த விவகாரம் தொ டர்பான வீடியோ இணைய தளங்களில் வெளியானது. இதையடுத்து விவசாயிகள் சங்க தலைவர் குருபூர் சாந்த குமார்,”வேட்டி அணிந்து வந்த விவசாயியை மாலுக்குள் அனு மதிக்காததை கடுமையாக கண்டிக்கிறேன். இந்த கொடு மையை கண்டித்து பெரிய அள வில் விவசாயிகளை அழைத்து மால் முன்பு போராட்டம் நடத்து வேன்’’ என எச்சரித்தார்.
இந்த எச்சரிக்கையை தொடர்ந்து மாலின் பாதுகாப்புப் பிரிவு பொறுப்பாளர் பிர சாந்த், பக்கிரப்பா - நாகராஜிடம் மன்னிப்புக் கோரியுள்ளார். மேலும் இதுபோன்ற சம்பவங் கள் இனி நடக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வேட்டி கட்டிய விவசாயிக்கு அனுமதி மறுத்த பெங்களூரு ஜிடி மாலை ஒருவாரம் மூட கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. கர்நாடக அரசின் இந்த உத்தரவுக்கு விவ சாயிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் வரவேற்பு தெரி வித்துள்ளனர்.