states

ஒரே மாதத்தில் ரூ.970 கோடிக்கு தேர்தல் பத்திரங்கள் விற்பனை

பெங்களூரு, மே 7- மே 10 அன்று நடைபெறவுள்ள கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக ஒரே மாதத்தில் ரூ. 970.50 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை விற்றுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) பதிலளித்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளிப்படைத்தன்மை பிரச்சாரகரும், ஓய்வுபெற்ற ராணுவ தளபதியுமான லோகேஷ் பத்ரா, கர்நாடக தேர்தல் நேரத்தில் விற்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக  தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பாரத ஸ்டேட் வங்கியிடம் கேள்வி எழுப்பியிருந் தார்.  இந்த கேள்விகளுக்கு எஸ்பிஐ செவ்வாய்க்கிழமை (மே 3) பதிலளித்தது.  எஸ்பிஐ அளித்த தகவலின்படி,”2018இல் தொடங்கப்பட்ட தேர்தல் பத்திரத் திட்டத்தின் கீழ், 2023 ஏப்ரல் 3 முதல் ஏப்ரல் 12 தேதி  வரை மொத்தம் 1,470 தேர்தல் பத்திரங்கள் ரூ 970.50 கோடிக்கு விற்பனை செய்யப் பட்டுள்ளது. அதிகபட்சமாக ஹைதரா பாத்தில் உள்ள எஸ்பிஐ கிளையில் ரூ.  335.30 கோடிக்கு தேர்தல் பத்திரம் விற்கப் பட்டுள்ளது. இது மொத்த பத்திர விற்பனை யில் 34 சதவீதம் ஆகும். தொடர்ந்து கொல்கத்தா எஸ்பிஐ கிளையில் ரூ.197.40  கோடியும், மும்பை எஸ்பிஐ கிளையில் ரூ.169.37 கோடியும், சென்னை  எஸ்பிஐ கிளை யில்  ரூ.122 கோடியும், தில்லி எஸ்பிஐ கிளை யில் ரூ.55.65 கோடியும் தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. விற்கப்பட்ட மொத்த பத்திரங்களில் சுமார் 58 சதவீதம் தில்லி எஸ்பிஐ கிளையில் ரூ 565.79 கோடி  பணமாக்கப்பட்டுள்ளது” எனக் கூறப் பட்டுள்ளது.

2018-ஐ விட 9 மடங்கு அதிகம்

கடந்த 2018 கர்நாடக சட்டமன்ற தேர்தலின் போது விற்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் விற்பனை குறித்து லோகேஷ் பத்ரா தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ்  கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எஸ்பிஐ அளித்த பதில்களின்படி,”2018 கர்நாடகா சட்ட மன்றத் தேர்தலுக்கு முன்னதாக அதாவது ஏப்ரல் மாதம் (தேர்தல் நாள் - மே 12)   ரூ.114.90 கோடி மதிப்புள்ள 256 தேர்தல்  பத்திரங்கள் விற்கப்பட்டன. மும்பை எஸ்பிஐ கிளை அதிகளவு பத்திர விற் பனையை (ரூ. 51 கோடி) மேற்கொண்டது. கொல்கத்தா எஸ்பிஐ கிளையில் ரூ. 40 கோடியும், பெங்களூரு எஸ்பிஐ கிளையில் ரூ.12.90 கோடியும், தில்லி எஸ்பிஐ கிளையில் ரூ.10கோடியும் தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப் பட்டன. விற்கப்பட்ட மொத்த  பத்திரங்களில் ரூ.6,000 தவிர மற்ற அனைத்து பத்திரங்களும் பணமாக்கப்பட்டன. அதிகபட்சமாக தில்லி யில் ரூ.113.40 கோடியும், பெங்களூருவில்  ரூ.1.50 கோடியும் என இரண்டு கிளை களில் மட்டுமே பணமாக்குதல் செய்யப் பட்டுள்ளது. 2018 கர்நாடக தேர்தல் பத்திர விற்பனை யை 2023 தேர்தலுடன் ஒப்பிடுகையில், இப்போது 9 மடங்கு அதிகமாக தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஊழலை சட்டப்பூர்வமாக்குவது: சீத்தாராம் யெச்சூரி

கர்நாடக தேர்தல் நேரத்தில் விற்பனை யாகியுள்ள தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தனது  டுவிட்டர் பக்கத்தில், ‘‘தேர்தல் பத்திரங்கள் விற்பனை அரசியல் ஊழலை சட்டப்பூர்வ மாக்குவதாக உள்ளது. 2018 முதல்  2023  ஏப்ரல் இடைப்பட்ட காலத்தில் ரூ.12,979  கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்கள் விற்கப் பட்டுள்ளன. இதில் 94.2 சதவீத தேர்தல் பத்திரங்கள் ரூ.1 கோடி மதிப்புள்ளவை ஆகும். இந்த பத்திரங்களை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் நான் தாக்கல் செய்த மனு தொடர்ந்து நிலுவையில் உள்ளது” என நினைவூட்டியுள்ளார். 

எஸ்பிஐ மட்டும் ஏன்?

2018இல் தொடங்கப்பட்ட தேர்தல் பத்திரத் திட்டத்தின் கீழ் அரசியல் கட்சிகள்  தேர்தல் பத்திரங்களைப் பெறுவதற்கு எஸ்பிஐ கிளைக்கு மட்டுமே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது தேர்தல் பத்திரங்களை விற்க எஸ்பிஐ வங்கியில் தனியாக(?) கணக்கு தொடங்க வேண்டும். மற்ற வங்கிகளில் தேர்தல் பத்திரங்களை மாற்ற முடியாது. தற்போதைய நிலவரப்படி 25 கட்சிகள் தேர்தல் பத்திரத்திற்கு கணக்குகளைத் தொடங்கியுள்ளன. தில்லி எஸ்பிஐ வங்கியில் தேசிய கட்சிகள் தங்கள் வங்கிக் கணக்குகளை வைத்துள்ளன. தேர்தல் பத்திரத் திட்டம் தொடங்கிய பொழுது (2018இல்) 13 கிளைகளில் பத்திரங்களை வழங்கிய எஸ்பிஐ, தற்போது 29 கிளைகளில் பத்திரங்களை விற்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.