இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 358 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரேனா தொற்று பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மீண்டும்அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கை அமல்படுத்த ஒன்றிய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம் உத்தரகாண்ட் மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாட்டில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 358ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 88 பேரும், தில்லியில் 67 பேரும், தெலங்கானாவில் 38 பேரும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 34 பேரும், கர்நாடகத்தில் 31 பேரும், குஜராத்தில் 30 பேரும், கேரளத்தில் 27 பேரும், ராஜஸ்தானில் 22 பேரும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரியானா, ஒடிசா மாநிலங்களில் தலா 4 பேரும், ஜம்மு-காஷ்மீர், மேற்கு வங்க மாநிலத்தில் தலா 3 பேரும், ஆந்திரம், உத்தரப் பிரதேசம் தலா 2 பேரும், சண்டிகர், லடாக், உத்தரகண்ட் மாநிலங்களில் தலா ஒருவரும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒமைக்ரான் தொற்று பாதிப்பிலிருந்து இதுவரை 114 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.