நாட்டில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,868 ஆக அதிகரித்துள்ளதாக ஒன்றிய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 29 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒமைக்ரானால் பாதிக்கப்படுவோர் விகிதம் அதிகரித்துள்ளது.
இது நேற்று பாதிக்கப்பட்டதை விட 15.8 சதவிகிதம் அதிகம் எனவும் சுகாதாரத் துறை குறிப்பிட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 1,281 பேருக்கும், அதற்கு அடுத்தபடியாக ராஜஸ்தானில் 645 பேருக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் 1805 பேர் ஒமைக்ரான் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.