states

img

இந்தியா: ஒரே நாளில் 2.47 லட்சம் பேருக்கு கொரோனா

நாட்டில் ஒரே நாளில் 2.47 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
நாடு முழுவதும் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுதொடர்பாக ஒன்றிய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், நாட்டில் புதிதாக 2,47,417 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது அதற்கு முந்தைய நாளை விட 27 சதவீதம் அதிகமாகும். அதுபோல நேற்று ஒரு நாளில் மட்டும் 380 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதையடுத்து நாடு முழுவதும் இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 4.85 லட்சமாக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்றிலிருந்து 84,825 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.கொரோனாவால் பாதிக்கப்பட்டு 11,17,531 பேர் பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  தொற்று பாதிக்கப்படும் விகிதம் 13.11 சதவிகிதமாக அதிகரித்து உள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரஸின் உருமாறிய, ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,488-ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.