states

img

ஏப்.1 முதல் கார்களில் ஏர்பேக் கட்டாயம் - மத்திய அரசு 

கார்களில் வரும் ஏப்ரல் 1 முதல் ஏர்பேக் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 
கடந்த 2019- ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் ஓட்டுநர் இருக்கைகளில் ஏர் பேக் கட்டாயம் என மத்திய அரசு  அறிவித்திருந்தது. தற்போது, முன் பக்கம் உள்ள இரு இருக்கைகளிலும் ஏர் பேக் கட்டாயம் என அறிவித்துள்ளது. 
இதைத்தொடர்ந்து ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் புதிதாக வடிவமைக்கும் கார்களில் ஏர்-பேக் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்றும், ஏற்கனவே வடிவமைக்கப்பட்ட கார்களில் வருகிற ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதிக்குள், ஏர்-பேக்-ஐ பொருத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.  இதனால் கார்களின் விலை சற்று உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

;