states

img

மக்களவை மாநிலங்களவை தொலைக்காட்சிகளை இணைத்து புதிய சேனல் உருவாக்கம்

நாடாளுமன்றத்தில் மக்களவை மாநிலங்களவை தொலைக்காட்சிகளை இணைந்து புதிய சேனல் ஒன்றை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 
தற்போது நாடாளுமன்ற மக்களவை நிகழ்வுகள் லோக்சபா தொலைக்காட்சியிலும் மாநிலங்களவை நிகழ்வுகள் ராஜ்யசபா தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பட்டு வருகிறது. இந்நைலயில் மாநிலங்களவை தலைவர் மக்களவை சபாநாயகர் இருவரும் இணைந்து லோக்சபா டிவி மற்றும் ராஜ்யசபா டிவியை இணைத்து ஒரே சேனலாக மாற்ற முடிவெடுத்துள்ளனர். புதிய சேனலுக்கு சன்சாத் டிவி என்ற பெயரிடப்பட்டுள்ளது. 

இந்த தொலைக்காட்சி சேனலுக்கு ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ரவி கபூர் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஒரு வருடம் வரை அல்லது அடுத்த உத்தரவு வரை இந்த பதவியில் நீடிப்பார்.

மக்களவை செயல்படும் போது அதன் நேரலையை மக்களவைத் தொலைக்காட்சியும், மாநிலங்களவையின் நடவடிக்கைகளை மாநிலங்களவைத் தொலைக்காட்சியும் வழக்கம் போல ஒளிபரப்பும். அதே வேளையில், இரு அவைகளின்ன் கூட்டு நடவடிக்கை மற்றும் அவை நடவடிக்கைகள் இல்லாத நேரத்தில், இரண்டு தொலைக்காட்சிகளிலும் ஒரே நிகழ்ச்சி ஒளிபரப்பப்படும். மக்களவையில் ஒரு நிகழ்ச்சி இந்தியிலும், மாநிலங்களவையில் அதே நிகழ்ச்சி ஆங்கிலத்திலும் ஒளிபரப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

;