புதுச்சேரி, ஜன. 25- திருபுவனை அருகே உள்ள மதகடிப்பட்டில் செவ்வாய்க்கிழமை தோறும் மாட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த மாட்டுச்சந்தையையொட்டி பல்வேறு கடைகள் அமைக்கப்படும். கடந்த சில மாதங்க ளாக கடைகள் அனைத்தும் விழுப்புரம் - புதுவை தேசிய நெடுஞ்சாலை அருகிலேயே அமைக்கப்பட்டு விற்பனை நடைபெற்றது. இதனால் அவ்வழியாக செல்லும் பேருந்து கள் மிகுந்த சிரமத்துடன் சென்று வந்தன. இதனால் அடிக்கடி அந்த பகுதியில் விபத்து ஏற்பட்டது. இதையடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் கடைகளை வரைமுறைப்படுத்தி சந்தை பகுதிக்கு உள்ளேயே கடைகளை வைத்து வியாபாரம் செய்வதற்கு ஏற்றவாறு இடங்களை அமைத்துக் கொடுத்தனர். இதனால் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வாகனங்கள் சென்று வந்தன.
இப்போது நடைபெற்ற வாரச்சந்தையிலும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் கடைகளை வரை முறை செய்யும் பணியில் ஈடுபட்டனர். செவ்வாயன்று (ஜன. 25) நடைபெற்ற மாட்டுச்சந்தையில் அதிகளவில் மாடுகள் விற்பனைக்கு வந்தன. சந்தை பகுதியில் மாடுகளை விற்பவர்களும், வாங்குபவர்க ளும் முகக்கவசம் அணியாமலும், தனி மனித இடைவெளியை பின்பற்றாலும் இருந்த னர். இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த பஞ்சாயத்து ஊழியர்கள் பொதுமக்களை தனிமனித இடைவெளியை பின்பற்றக் கோரி யும், முகக்கவசம் அணியவும் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தினர். கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில் இதுபோன்ற சந்தைகள் நடைபெறும் போது பஞ்சாயத்து நிர்வாகமும், காவல் துறையும் முன் எச்சரிக் கையாக இருந்து கூட்டம் கூடுவதை முறைப் படுத்த வேண்டும். முகக்கவசம் அணியாத வர்களை சந்தைக்குள் அனுமதிக்கக் கூடாது என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.