states

img

வாகன புதுப்பிப்பு கட்டண உயர்வு: ரத்து செய்ய சிஐடியு கோரிக்கை

புதுச்சேரி ஏப். 19- போக்குவரத்து துறை யின் அநியாய கட்டண உயர்வுகளை திரும்பப் பெறக் கோரி சிஐடியு சார்பில் புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி போக்குவரத்து துறை வாகனங்களை புதுப்பிப்பதற்கான கட்டணங்களை பன்மடங்கு உயர்த்தியுள்ளதை ரத்து செய்யக் கோரியும், ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள புதிய போக்குவரத்து மசோதாவை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி யும், புதுச்சேரி ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தனி நலவாரியம் அமைக்கக் கோரியும் இந்த போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரி முதலியாரர் பேட்டை 100 அடி சாலையில் உள்ள போக்குவரத்து துறை அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு ஆட்டோ சங்க பிரதேச தலை வர் சீனிவாசன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு ஆட்டோ சம்மேளன மாநில பொதுச்செயலாளர் சிவாஜி கலந்து கொண்டு பேசினார். இதில் கவுரவத் தலை வர் முருகன், பொதுச் செய லாளர் மது (எ) லிங்கேசன், துணைத்தலைவர் கொளஞ்சியப்பன், நிர்வாகி கள் மதிவாணன், விஜய குமார், ரவிக்குமார், நூர் முகமது, ராமு, செந்தில்  குமார், மனோகர், பழனிபாலன், மணவாளன், ராமு, முருகன் ஆனந்த் உள்ளிட்ட ஏரளமான ஆட்டோ ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர். பின்னர் போக்குவரத்து துறை ஆணையர் சிவக்  குமார், ஆய்வாளர் சீதா ராம ராஜ் ஆகியோரை நிர்வாகி கள் சந்தித்து மனு அளித்த னர்.