புதுச்சேரி,பிப்.6- சாலையோர வியபாரக்குழு உறுப்பினர் தேர்தலில் சிஐடியு வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல். புதுச்சேரி உழவர்கரை நகராட்சிக்குட் பட்ட நகர சாலையோர விற்பனைக் குழு உறுப்பினர்கள் தேர்தல், பிப்.22 அன்று நடைபெறுகிறது. இந்த நகராட்சிக்குட்பட்ட 7 தொகுதிகளில் ஆண்கள் 6 ,பெண்கள் 6 பேர் என மொத்தம் 12 பேர் உறுப்பி னர்களை தேர்வு செய்வதற்கு இந்த தேர்தல் நடைபெறுகிறது. இதன்றாக வேட்பு மனு தாக்கல் ஜனவரி 23 அன்று துவங்கி யது. பிப்ரவரி 6 மனு தாக்கலுக்கு கடைசி நாளாகும். சிஐடியு புதுச்சேரி பிரதேச சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக போட்டி யிடும் 12 வேட்பாளர்களும் இறுதி நாளான பிப்.6 அன்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். புதுச்சேரி உழவர்கரை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்ச்சியில் சிஐடியு புதுச்சேரி மாநிலத் தலைவர் என்.பிரபுராஜ், செயலாளர் ஜி.சினுவாசன், நிர்வாகிகள் ராஜ்குமார், தினேஷ், மதிவாணன்,அழகர்ராஜ்,வடிவேல்,வீரா, சேவியர், சூரியன், அந்தோணி குரூஸ், உதய சங்கர், அன்பழகன், ராமசாமி, கெம்பு ராஜ்,அய்யனார்,ரவி, எல்லப்பன் உட்பட திரளான சாலையோர வியாபாரிகள் கலந்து கொண்டனர். முன்னதாக இந்திரா காந்தி சதுக்கத்திலிருந்து ஊர்வலமாக வந்தனர்.