புதுச்சேரி,ஜூன்.20- புதுச்சேரியில் நடந்த பத்தாம் வகுப்பு 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் அதிக அளவில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ள தாக முதல்வர் ரங்கசாமி தெரி வித்தார். 2021-2022 ஆம் ஆண்டுக்கான 12 வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கடந்த ஏப்ரல் மாதம் துவங்கி மே மாதம் வரைக்கும் நடைபெற்றது. இத்தேர்வு முடிவுகளை திங்களன்று (ஜூன் 20) சட்டப்பேரவையில் முதல்வர் என்.ஆர். ரங்கசாமி வெளியிட்டார்.
தேர்ச்சி அதிகரிப்பு
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர், “நடந்த முடிந்த 12 ஆம் வகுப்பு மாணவர்க ளுக்கான பொதுத் தேர்வில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த பள்ளிகளில் மொத்தம் 14,423 மாணவர்கள் தேர்வு எழுதினர். இவர்களில் 13,865 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ள னர். தேர்ச்சி 96.13 விழுக்காடாகும். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 4.81 விழுக்காடு கூடுதல்” என்றார். மாநிலத்தில் 68 பள்ளிகள் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளது. இவற்றில் இரண்டு அரசுப் பள்ளிகளும். கடந்த ஆண்டை விட அரசுப் பள்ளி மாணவர்கள் 10 விழுக்காடு கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். இதற்காக ஆசிரி யர், பெற்றோருக்கு பாராட்டு தெரி வித்தார்.
கல்லூரி கட்டணம்: விரைவில் அறிவிப்பு
12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் உயர்கல்வி படிப்பதற்கு அரசுக் கல்லூரிகளில் கூடுதல் இடங்கள் உருவாக்கி கொடுக்கப்படும். கல்வி கட்டணம் குறித்து அரசு விரைவில் முடிவு செய்து அறிவிப்பை வெளியிடும் என்றும் முதலமைச்சர் கூறினார்.
10 ஆம் வகுப்பு முடிவுகள்
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் புதுச்சேரி மற்றும் காரைக் கால் பகுதியை சேர்ந்த 15,515 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 15,346 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 92.92 விழுக்காடாகும். மொத்தமுள்ள 292 பள்ளிகளில் 114 பள்ளிகள் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விழுக்காடு 85.1 என்று கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறினார். மேலும் அமைச்சர் கூறுகையில்,“ ஜூன் 23 ஆம் தேதி புதுச்சேரியில் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்றும் அன்றை தினம் பாடப்புத்தகம், சீறுடை வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது கல்வித்துறை செயலர் ஜவகர், கல்வித்துறை இயக்குநர் ருத்ர கவுடு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.