states

வகுப்பறைகளில் அரிசி மூட்டைகள்: மாணவர் சங்கம் கடும் கண்டனம்

புதுச்சேரி, மார்ச் 16- புதுச்சேரியில் உள்ள 1.5 லட்சம்  சிவப்பு நிற குடும்ப அட்டைதார் களுக்கு ஒன்றிய அரசின் சார்பில் இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றால் வாழ்வாதாரம் இழந்துள்ள ஏழை எளிய மக்களுக்கு உணவு தானி யங்களை இலவசமாக வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகளின் வலியுறுத்த லின் பேரில் ஒன்றிய அரசு நபர் ஒன்றுக்கு மாதம் 5 கிலோ இலவச அரிசி வழங்கி வருகிறது. புதுச்சேரியில் பெரும்பாலான நியாய விலைக்கடைகள் மூடப்பட்டி ருந்ததால், கல்வித்துறைக்கு சொந்த மான பள்ளிக் கட்டிடங்களில் அரிசி மூட்டை களை வைத்து அரிசி விநியோகம் செய்யப்படுகிறது. புதுச்சேரி குடிமை பொருள் வழங்கல் துறை மூலம் விநியோகம் செய்யப்படும் இந்த அரிசி தரமற்றதாகவும், பழுப்பு நிறத்தில் உள்ளது. மேலும் புதுச்சேரி பயனாளி கள் ஒற்றை அவியல் அரிசியை தான் விரும்பு கின்றனர். அதற்கு மாறாக இரட்டை அவியல் அரிசி வழங்கப்படுவதால், பயனாளிகள் அதை வாங்குவதற்கு முன்வர வில்லை. பயனாளிகள் அரிசியை வாங்காத தால் கல்வி வளாகம் அரிசி மண்டியாக இன்னும் காட்சி அளிக்கிறது. கொரோனா பெருந்தொற்று தற்போது படிப்படியாக குறைந்து வருவதால் மழலைப் பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளிகள் முழுமையாக புதுச்சேரியில்  இயங்கி வருகிறது.

மேலும் இன்னும் சில நாட்க ளில் பொதுத்தேர்வுகளும் நடைபெற இருப்ப தால் கூடுதல் வகுப்பறைகள் மாணவர்க ளுக்கு தேவைப்படுகிறது. இந்நிலையில் பள்ளி வகுப்பு அறைகளில் இன்னும் அரிசி மூட்டைகளை அடுக்கி வைத்துள்ளதால், ஆசிரியர்களும், மாணவர்களும் தவித்து வருகின்றனர் என்று இந்திய மாணவர் சங்கம் புதுச்சேரி கல்வித்துறையை குற்றஞ்சாட்டியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் பிரதேசத் தலைவர் ஜெயபிரகாஷ், செயலாளர் பிரவீன் ஆகியோர் கூறுகையில்,“ நீண்ட இடை வெளிக்கு பிறகு கல்வி நிலையங்கள் முழுமையாக செயல்படத் துவங்கி உள்ள நிலையில், 270 அரசுப் பள்ளிகளிலுள்ள  வகுப்பறைகளில் இன்னும் அரிசி மூட்டைகள் அடுக்கி வைத்திருக்கிறது. இதனால், மாணவர்களின் கல்வி கற்றல் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அரிசி மண்டிகளாக மாற்றப் பட்டுள்ள பள்ளிகளில் உள்ள அரிசி மூட்டைகளை அப்புறப்படுத்த வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை புதுச்சேரி கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.