states

img

தீபாவளி போனஸ் வழங்கக் கோரி புதுவை நலவாரியம் முற்றுகை

புதுச்சேரி, அக்.10- தீபாவளி போனஸ் வழங்ககோரி கட்டிட தொழிலாளர்கள் நலவாரி யத்தை முற்றுகையிட்டனர். விலைவாசி உயர்வு, வேலயில் லாத் திண்டாட்டதை கருத்தில்  கொண்டு, கட்டிட தொழிலாளர்க ளுக்கு தீபாவளி போனசாக ரூ. 5000 ஆயிரம் வழங்க வேண்டும், கடந்த ஆண்டை போல் தொழிலாளர்கள் அலைகழிக்கப்படாமல், அவரவர் வங்கிக் கணக்கில் இந்த தொகையை  செலுத்த வேண்டும். தொழிலாளர்களின் பிள்ளை களுக்கு ஆரம்பகல்வி முதல் ஆராய்ச்சிக்கல்வி வரையிலான கல்வி உதவித்தொகையை இரு மடங்காக உயர்த்தி வழங்க வேண்டும். உறுப்பினராக்கக் கோரி  விண்ணபித்தர்வர்கள் அனைவரை யும் உறுப்பினராக சேர்க்க வேண்டும். தொழிலாளர்களின் இயற்கை இறப்பு நிவாரணம் ரூ.2 லட்சமாக வும், விபத்து கால இறப்பு நிதி ரூ.5 லட்சமாகவும் உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் உள்ள கட்டுமான தொழிலாளர் நலவாரிய அலுவலகம் முன்பு நடை பெற்ற போராட்டத்திற்கு கட்டிட மற்றும் கட்டுமான தொழிலாளர் சங்க  பிரதேச தலைவர் கலியன் தலைமை  தாங்கினார். சிஐடியு பிரதேசத் தலைவர் பிரபுராஜ், செயலாளர் சீனுவாசன், சங்கத்தின் பொருளாளர் ஜீவானந்தன், விவசாயிகள் சங்க பிரதேச செயலாளர் சங்கர், மாதர்  சங்கத்தின் பிரதேச செயலாளர் இளவரசி ஆகியோர் கோரிக்கை களை வலியுறுத்தி பேசினர். பின்னர் முற்றுகை போராட்டத் தில் ஈடுபட்ட தொழிற்சங்க தலை வர்களை அழைத்து பேசிய நல வாரிய அதிகாரிகள், கோரிக்கை கள் குறித்து அரசிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து போராட் டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.