states

img

புதுச்சேரியில் மக்கள் போராளி ஸ்டான்சாமி நூல் அறிமுக கூட்டம்

புதுச்சேரி,நவ.20- புதுச்சேரியில் முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கமும் பாரதி புத்த காலயமும் இணைந்து பழங்குடியின மக்களின் போராளி ஸ்டான்சாமி நூல் அறி முகக் கூட்டத்தை நடத்தின. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினர் பாவலர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கி னார். முனைவர் க.பஞ்சாங்கம் நூலை அறிமுகம் செய்து பேசினார்.  சவுத் விஷன் புத்தக நிறுவனத்தின் நிர்வாகி த.நீதிராஜன், பாரதி புத்தகால யத்தின் புதுச்சேரி பொறுப்பாளர் அ.செல்வம், முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் புதுச்சேரி தலைவர் உமா அமர்நாத், செயலாளர் கலியமூர்த்தி, பொருளாளர் அருண், நிர்வாகிகள் லெனின் பாரதி, ஆசிரியர் பச்சையம்மாள், சொக்கலிங்கம், தமிழ்மணி ஆகியோர் பேசினர். அஞ்சலி முன்னதாக, மறைந்த சிறுகதை எழுத்தாளர் பா.செயபிரகாசத்திற்கு இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தினர்.