states

பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம்: புதுச்சேரி ஆட்சியர் வல்லவன் அறிவிப்பு

புதுச்சேரி, ஏப். 7- புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதை யடுத்து, பொது இடங்களில் கொரோனா விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என வருவாய் பேரிடர் மேலாண்மைத் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து புதுச்சேரி ஆட்சியர் வல்லவன் செய்தி யாளர்களிடம் கூறுகையில், “புதிய உருமாறிய கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒரு வாரமாக இந்தியாவில் பாதிப்பு கள் அதிகரித்துள்ளது. புதுவை யிலும் கொரோனா தொற்று அதி கரித்து வருகிறது. நோய் அறி குறிகளுடன் வருபவர்களை பரி சோதனை செய்யும்போது 15 விழுக்காட்டினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்படுகிறது. இதனால் கொரோனா பரவலை கட்டுப் படுத்த மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை செயல்படுத்த உத்தரவு பிறப்பித்துள்ளோம்”என்றார். பொது இடங்களில் கொ ரோனா விதிமுறைகளை மக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

கடற்கரை சாலை, பூங்கா, திரையரங்கு போன்ற பொது இடங்களில் கண்டிப்பாக பொதுமக்கள் முகக் கவசம் அணிய வேண்டும். மருத்துவ மனை, ஓட்டல்கள், மதுபார்கள், உணவகங்கள், கேளிக்கை விடுதிகள், அரசு அலுவலகங்கள், வியாபார வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தொழில் கூடங்களில் பணி செய்பவர்கள் முகக் கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து அரசு மற்றும் தனி யார் நிறுவனங்களிலும் ஊழி யர்களுக்கு 100 விழுக் காடு தடுப்பூசி செலுத்தப்பட்டி ருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும்  அவர் கூறினார். அரசால் வெளியிடப் படும் அனைத்து அறிவுறுத்தல் களையும், வழிகாட்டுதல் களையும் கண்டிப்பாக கடை பிடிக்க வேண்டும். கொரோனா விதிமுறைகளான முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அடிக்கடி கைகளை கழுவ வேண்டும், கிருமிநாசினி பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். மேலும் கல்வித்துறை ஏற்கனவே வெளியிட்டுள்ள தேர்வு அட்டவணைப்படி கொரோனா கட்டுப்பாடு விதி களை கடைபிடித்து தேர்வு நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.