states

img

புதுவையில் மின்துறை ஊழியர்களுக்கு ஆதரவாக சிபிஎம் போராட்டம்

புதுச்சேரி, ஜூன் 13 - தனியார்மயத்தை எதிர்த்து தொடர் போராட்டத்தில் ஈடுபட் டுள்ள மின் ஊழியர்களுக்கு ஆதர வாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. புதுச்சேரி அரசின் மின் துறையை ஒன்றிய, மாநில என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக அரசு தனியார்மயமாக்குகிறது. இதனை எதிர்த்து மின் ஊழியர்கள், பொறி யாளர்கள் ஆகியோர் கொண்ட போராட்டக் குழு மின்துறை தலைமை அலுவலகம் முன்பு தொடர் உண்ணாநிலைப் போராட் டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு ஆதரவாகவும், மின்துறை அரசு துறையாகவே நீட்டிக்க கோரி புதுச்சேரி உப்பளம் தலைமை மின்துறை அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சி யின் பிரதேச செயலாளர் ராஜாங் கம் தலைமை தாங்கினார். மூத்த தலைவர் முருகன், செயற்குழு உறுப்பினர் பெருமாள், மின்துறை ஊழியர்களின் போராட்டக் குழு ஆலோசகர் ராம சாமி உள்ளிட்டோர் பேசினர். செயற்குழு உறுப்பினர்கள் ராமச் சந்திரன், கலியமூர்த்தி, சீனிவா சன், நகர செயலாளர் மதிவாணன்,  உழவர்கரை நகர செயலாளர் ராம்ஜி, பிரதேச குழு உறுப்பினர் கள் சங்கர், ரமேஷ் உள்ளிட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.